பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுவதற்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் குறும்பலாப்பேரி இளங்கோ தூய்மை பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் வல்லாள மகாராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


