மாநில டேக்வாண்டோ போட்டிக்கு
ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்hரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
நெல்லை மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் லிமான் முதலிடமும், மாணவர் ஸ்ரீராம் பிரகாஇரண்டாமிடமும் மேலும் இப்பள்ளி மாணவர்கள் ஜான்லியான்ஸ், பெனி, லியான், புவனேஸ்ராஜா, மாணவி ரம்யா ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர் இவர்கள் கடலூரில் நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்
டேக்வாண்டா போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு
Popular Categories


