திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கரூர் பாஜக., சபதம்!

karur bjp meeting senthilnathan - 2026

பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு & தேர்தல் பயிலரங்கம் தரகம்பட்டி ஶ்ரீ செந்தில்முருகன் மஹாலில் நடைபெற்றது.

பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட செயலாளருமான காவேரி மோகன்ராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் கரூர் க்ளெஸ்ட்டர் இணை பொறுப்பாளரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான N.P.சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் பொறுப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட துணை தலைவருமான P.R.ஆறுமுகம், சட்டமன்ற பொறுப்பாளர் N.முருகானந்தம் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள் ஸ்ரீவிகான் ரமேஷ், கோபிநாத், சுரேஷ், பாலுச்சாமி, சிந்தியா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில் “கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் யாரை தேசிய ஜனநாயக கூட்டணி கை காட்டுகிறதோ அவரை வெற்றிபெற செய்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க செய்யும் செயலை 100% பாரதிய ஜனதா கட்சி செய்யும்.

மேலும் கிராமப் பகுதிகள் நிறைந்த இந்த தொகுதியில் அதிக அளவில் கஞ்சா/போதை உண்டாக்கும் பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது இது இளைய சமுதாயத்தினை பெரிதும் பாதிக்கிறது,

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அரசு ஊழியர்கள் பலர் பொதுமக்களிடம் கையூட்டு பெற்று கைதாவது அடிக்கடி நடக்கிறது இவைகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தவறினால்
பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காக போராடும் என்று சூளுரைத்தார்.

மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் பேசுகையில், இந்த சிறப்பு வாய்ந்த தொகுதி நிர்வாகிகள் மாநாட்டில் மாவட்ட தலைவர் அவர்கள் கூறியது போல் தொகுதியில் உள்ள 260 கிளைகளையும் வலுப்படுத்தி அனைவரும் இணைந்து இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியினை மாவட்ட தலைவர் கையில் கொடுக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்,
அடுத்த 4 மாதங்கள் சட்டமன்றத்தில் உள்ள நம் அனைவரும் ஊழலில் ஊறிய இந்த திராவிட மாடல் ஆட்சியினை ஒழித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மலர களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டில் 1)பொண்ணனை ஏரி சிறப்பு திட்டத்தினை உடனடியாக வகுத்து அதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் 2)தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காகவும்-இந்த போலி சமூக நீதி / திராவிட மாடல் அரசின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தினை மீட்க கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் – என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் தங்களது கிளைகளில் 100 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்த கிளை தலைவர்கள் அந்தந்த கிளைகளின் மண்டல் தலைவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் பார் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் வடிவேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம்மாள், கற்பக வள்ளி, முருகானந்தம், ரெங்கநாதன், யுவராஜ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் குமரேசன் விவசாய அணி மாவட்ட துணை தலைவர்கள் கலா மணி வேல்முருகன், செந்தில்குமார், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள்,
கிளை தலைவர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், BLA-2 பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories