அதிமுக கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்-இபிஎஸ்..

1205362 admkedappadi - 2026

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தலைவர்களும் இதையே சொல்லி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி, மிக வலிமையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது.

பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனது கருத்துகளை கூறி உள்ளார். அதனை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

இதனிடையே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகி விட்டதாக இப்போதே யாரும் சொல்ல மாட்டார்கள். கூட்டணியை பொறுத்தவரை எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் இல்லை. அது தண்ணீரில் எழுதுவது போன்றது. இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் முன்னுரையும், முடிவுரையும் இப்போதே எழுதிவிட முடியாது.

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் அளவிற்கு எங்களின் வேட்பாளர்கள் இருக்க வேண்டும். மாற்றத்திற்கான எழுச்சியை இப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டோம். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை யாரும் இப்போதே சொல்ல மாட்டார்கள். என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

இந்தநிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை. கூட்டணி தொடர்பாக மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம் என்றார். கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories