December 6, 2025, 10:41 PM
25.6 C
Chennai

ஜெயலலிதாவின் பெயரில் 3 சிறப்பு விருதுகள் ! முதல்வர் அறிவிப்பு !

kalaimaamani1 - 2025இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாணி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் இது மிகவும் உயரிய அங்கீகாரமாக கருதப்பட்டு வருகிறது.kalaimaanani - 2025முன்னதாக, கடந்த 5 வருடங்களாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. இதற்காக பல்வேறு வழக்குகள் முறையிடப்பட்டு, சட்டப்போராட்டத்தை தொடர்ந்து இன்று இந்த விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.kalaimaani - 2025அதன்படி, 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரைக்குமான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்த சாதனையாளர்களுக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.kalaimaamani 2 - 2025நடிகர்கள்: கார்த்தி, பிரபுதேவா, விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் ஆண்டனி, சந்தானம், பாண்டியராஜன், பிரசன்னா, சூரி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ், பாண்டு, சிங்கமுத்து, சிவன் சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.kalaimamani 3 - 2025நடிகைகள்: குட்டி பத்மினி, நளினி, சாரதா,காஞ்சனா, பிரியாமணி, ராஜஸ்ரீ, எஸ்.என்.பார்வதி, பி.ஆர்.வரலட்சுமி, ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோருக்கு கலைமாமணி விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசிரியர் யுகபாரதி, நடன இயக்குனர்கள் புலியூர் சரோஜா, தாரா ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.srikanth - 2025மேலும், ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோரத்னம், பின்னனி பாடகர்கள் எஸ்.ஜானகி, சசிரேகா, மாலதி, அபஸ்வரம் ராம்ஜி, கிருஷ்ணராஜ், உண்ணிமேனன், உலகநாதன், கானாபாலா, வேல்முருகன், பரவை முனியம்மா. ஒளிப்பதிவாளர்கள்: பாபு, ரத்னவேலு, ரவிவர்மன் ,  ஸ்டில்ஸ் ரவி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.kalaimamani 1 - 2025தவிர, பி.ஆர்.ஓ.யூனியனின் கெளரவ தலைவர் நெல்லை சுந்தர்ராஜன், பி.ஆர்.ஓ. யூனியனின் கௌரவ உறுப்பினரும், நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் ஆகியோருக்கும் கலைமாமணி விருதை முதல்வர் வழங்கினார். திரைப்பட தயாரிப்பாளர்கள் கலை ஞானம், ஏ.எம். ரத்னம், இயக்குநர்கள் பவித்ரன், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் முதல்வர் பழனிசாமி கையால் கலைமாமணி விருதை பெற்றனர்.yuvan - 2025இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, கலைமாமணி விருதுகள் 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன் அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,000-மாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories