சிறுவர்களை ரவடிகளிடமிருந்து காக்க பாய்ஸ் கிளப்! காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி!

samundiswari - 2026

காஞ்சிபுரத்தில் காவல் துறை மூலம் பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட பள்ளிப் படிப்பை நிறுத்தும் சிறுவர்கள், பள்ளி செல்லா சிறுவர்களை ரவுடிகள் சிலர் தங்கள் குழுக்களில் இணைத்துக் கொள்கின்றனர். இதனைத் தடுக்க பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு மூலம் அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படலாம்.

அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்துதல், பள்ளிக்கு அனுப்புதல் போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் என்னை அணுகலாம்.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

போக்குவரத்தை சரி செய்தல், கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த மாணவர்களை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். இதில் சேர விரும்பும் இளைஞர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து பிரச்சினை, ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் வந்துள்ளன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது வரை 74 ரவுடிகளை கைது செய்துள்ளோம். காஞ்சிபுரத்தின் முக்கிய ரவுடியான தணிகாவை பிடிக்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கோயில்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து கோயில்களுக்கு காவல் பாதுகாப்பு போட்டுள்ளோம். அந்த பாதுகாப்பு இன்னும் சில தினங்களுக்கு தொடரும். கோயிலுக்கு வந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories