சிறுவர்களை ரவடிகளிடமிருந்து காக்க பாய்ஸ் கிளப்! காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி!

samundiswari - 2026

காஞ்சிபுரத்தில் காவல் துறை மூலம் பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட பள்ளிப் படிப்பை நிறுத்தும் சிறுவர்கள், பள்ளி செல்லா சிறுவர்களை ரவுடிகள் சிலர் தங்கள் குழுக்களில் இணைத்துக் கொள்கின்றனர். இதனைத் தடுக்க பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு மூலம் அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படலாம்.

அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்துதல், பள்ளிக்கு அனுப்புதல் போன்ற உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் என்னை அணுகலாம்.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

போக்குவரத்தை சரி செய்தல், கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த மாணவர்களை நாங்கள் பயன்படுத்த உள்ளோம். இதில் சேர விரும்பும் இளைஞர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து பிரச்சினை, ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் வந்துள்ளன. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். ரவுடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது வரை 74 ரவுடிகளை கைது செய்துள்ளோம். காஞ்சிபுரத்தின் முக்கிய ரவுடியான தணிகாவை பிடிக்கவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கோயில்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து கோயில்களுக்கு காவல் பாதுகாப்பு போட்டுள்ளோம். அந்த பாதுகாப்பு இன்னும் சில தினங்களுக்கு தொடரும். கோயிலுக்கு வந்தவர்கள் யார் என்பது குறித்த விவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories