December 6, 2025, 2:13 PM
29 C
Chennai

சுதந்திரம்… நாட்டுக்கு கிடைத்தது; இந்துக்களுக்கு கிடைப்பது எப்போது?!

ramagopalan
ramagopalan

இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, இந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.. நாம் நமது சுதந்திரத்திற்காக போராட தயாராகுவோம்..

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியுப் சேனலில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்தி தொடர்ந்து விடியோ வெளியிட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துக்களின் சமய நம்பிக்கைகள், இறை அடியார்கள் தொடர்ந்து இழிவு படுத்துவது அதிகரித்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

பொய்யும் புரட்டும் கேவலமான சிந்தனையும் இந்துக்களின் சமய நம்பிக்கைகள் மீது திணிக்கப்படுகிறது. இது குறித்து இந்து முன்னணி தொடர்ந்து புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்து வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்தாலும் நீதி கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

இந்து சமய நம்பிக்கைகளை, இறை அடியார்களை கொச்சைப்படுத்தி வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, நீதமன்றம் மூலம் தண்டனை தராத நிலையில் இந்து விரோதிகளுக்கு, துரோகிகளுக்கு மீண்டும் மீண்டும் கொச்சைப்படுத்த துணிச்சல் வருகிறது. 

இந்த கறுப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டம், கொரோனா நோய் அச்சத்திலிருந்து மக்கள் மீள பெரும்பாலான மக்களால் பாராயணம் செய்யப்பட்டு வரும் கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, அநாகரிகமாக விடியோ வெளியிட்டுள்ளது. இதற்கு இந்து சமுதாயத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலத்தரப்பிலிருந்தும் கண்டன குரல் எழுந்துள்ளது. தாமதமானாலும் கண்டனம் தெரிவித்த அனைவருக்கு மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

1947இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபோதும், இந்துக்களுக்கு இன்னமும் சுதந்திர கிடைக்கவில்லை. அநாகரிமான, கேவலமான வசை மொழிகள் இந்து சமயத்தை குறிவைத்து தாக்கப்படுவது தொடர்கிறது. இதனை எதிர்த்து போராடினால் மட்டுமே, இந்துக்கள் சுதந்திரமாக தத்தமது மத நம்பிக்கைகளை காத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்து சமுதாயம், மீண்டும் ஒரு சுதந்திரபோருக்கு, போராட முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

  • இராம கோபாலன்
    (நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories