சுதந்திரம்… நாட்டுக்கு கிடைத்தது; இந்துக்களுக்கு கிடைப்பது எப்போது?!

ramagopalan
ramagopalan

இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, இந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.. நாம் நமது சுதந்திரத்திற்காக போராட தயாராகுவோம்..

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியுப் சேனலில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்தி தொடர்ந்து விடியோ வெளியிட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துக்களின் சமய நம்பிக்கைகள், இறை அடியார்கள் தொடர்ந்து இழிவு படுத்துவது அதிகரித்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

பொய்யும் புரட்டும் கேவலமான சிந்தனையும் இந்துக்களின் சமய நம்பிக்கைகள் மீது திணிக்கப்படுகிறது. இது குறித்து இந்து முன்னணி தொடர்ந்து புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்து வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்தாலும் நீதி கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

இந்து சமய நம்பிக்கைகளை, இறை அடியார்களை கொச்சைப்படுத்தி வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, நீதமன்றம் மூலம் தண்டனை தராத நிலையில் இந்து விரோதிகளுக்கு, துரோகிகளுக்கு மீண்டும் மீண்டும் கொச்சைப்படுத்த துணிச்சல் வருகிறது. 

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இந்த கறுப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டம், கொரோனா நோய் அச்சத்திலிருந்து மக்கள் மீள பெரும்பாலான மக்களால் பாராயணம் செய்யப்பட்டு வரும் கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, அநாகரிகமாக விடியோ வெளியிட்டுள்ளது. இதற்கு இந்து சமுதாயத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலத்தரப்பிலிருந்தும் கண்டன குரல் எழுந்துள்ளது. தாமதமானாலும் கண்டனம் தெரிவித்த அனைவருக்கு மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

1947இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபோதும், இந்துக்களுக்கு இன்னமும் சுதந்திர கிடைக்கவில்லை. அநாகரிமான, கேவலமான வசை மொழிகள் இந்து சமயத்தை குறிவைத்து தாக்கப்படுவது தொடர்கிறது. இதனை எதிர்த்து போராடினால் மட்டுமே, இந்துக்கள் சுதந்திரமாக தத்தமது மத நம்பிக்கைகளை காத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இந்து சமுதாயம், மீண்டும் ஒரு சுதந்திரபோருக்கு, போராட முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

  • இராம கோபாலன்
    (நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி)
ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories