December 5, 2025, 7:22 PM
26.7 C
Chennai

ATM card வைத்து ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுபவரா..? இது தெரிஞ்சுக்கோங்க!

atm card
atm card

ஏடிஎம் அல்லது கிரேடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்கு வருபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளன.

அதாவது இதுவரை நீங்கள் பேடிஎம், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் உங்களுடைய கிரேடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் விவரங்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.

ஆகவே ஒவ்வொரு முறை நீங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்தால் எளிதாக உங்களுடைய பணத்தை செலுத்திவிடலாம்.

ஆனால் இனிமேல் இந்த முறையில் சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன்படி இனிமேல் பேடிஎம்,கூகுள் பே, போன் பே, நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட எந்த தளத்திலும் உங்களுடைய கிரேடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை ஸ்டோர் செய்து வைக்க முடியாது.

atm card
atm card

ஆகவே ஒவ்வொரு முறை நீங்கள் கிரேடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தும் போது உங்களுடயை கார்டின் 16 இலக்க எண், செல்லுபடியாகும் கடைசி வருடம் மற்றும் மாதம் ஆகிய விவரத்தை தரவேண்டும். அதன்பின்னர் மீண்டும் சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்து பணத்தை செலுத்த வேண்டும்.

இந்த முறையின் மூலம் உங்களுடைய கார்டு விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இதனால் நிறையே இடங்களில் ஆன்லைன் பண மோசடி அதிகரித்துள்ளது. அதற்கு வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டு விவரங்கள் கசிந்து போவது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

atm 1 1
atm 1 1

எனவே இவ்வாறு மோசடி நடப்பதை தடுக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

எனினும் இந்த நடைமுறை படுத்தப்படும் தேதி தொடர்பாக விரிவான தகவல் எதுவும் இல்லை. இந்த முறைப்படி ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் அந்த சமயத்தில் மட்டும் அந்த தளத்தில் உங்களுடைய கார்டு விவரங்களை அளிப்பதால் அந்த விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது.

இந்த நடைமுறை அனைத்து இ-சேவை நிறுவன செயலிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாக கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் எண்கள் 16 இலக்கத்தில் இருக்கும். அதேபோல் சிவிவி எண் 3 இலக்கத்தில் இருக்கும். சிவிவி எண்ணை நம்மால் எளிதில் நியாபகத்தில் வைத்து கொள்ள முடியும். ஆகவே ஒவ்வொரு முறையும் கார்டை தேட வேண்டியதில்லை.

ஆனால் புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நாம் 16 இலக்க கார்டு எண் தெரியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் கார்டை வைத்து தான் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். இது ஒரு பெரிய சிக்கலாக அமைந்துவிடும் என்றாலும் நம்முடைய தகவல் கசியாமல் இருப்பதில் இருந்து காக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories