செந்தில் பாலாஜிக்காக வரம்பு மீறி செயல்படும் முதல்வர்; வறுத்தெடுத்த அண்ணாமலை!

stalin old tweets - 2026

‘உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார்’ என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இதுபற்றி தெரிவித்தது….

“உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார். செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக ஆளுநர் கூறவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆளுநர் பொத்தாம் பொதுவாக நடிவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அப்படி எனில், திமுக.,வின் அமைச்சர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றங்களைத் தான் பாஜக., எதிர்க்கிறது” என்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை கூறுகையில், ‘அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது ஆளுநர் அதிகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது’ எனக் கூறினார்.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “செந்தில் பாலாஜி விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்பதை நினைவுப்படுத்துகிறோம். 2018ல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுக.,வின் நாடகம் மாற்றாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories