முதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்

Published:

waga border scene - 2026

பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இருநாட்டு ராணுவ வீரர்களின் செய்கைகள் அறுவெறுப்பாக உள்ளது என்று முன்னர் குற்றம் சாட்டியிருந்தார் யஷ்வந்த் சின்ஹா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் நாள்தோறும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் காலையில் தேசியக் கொடியை ஏற்றி மாலையில் அதனை இறக்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் தனிப்பட்ட ஸ்டைலில் மார்ச்சிங் செய்வார்கள். கடந்த 1959ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, முகத்தில் கோபம், ஆக்ரோஷம், வீரம், கடுங்கோபம் என முகக்குறிப்பை வெளிப்படுத்துவார்கள். இப்படி போர் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண இரு நாடுகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகா எல்லைக்கு வந்து செல்கின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தற்போது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் பயங்கரவாதத் தாக்குதலில்  இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் இவ்வாறு ராணுவ வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று சைகைகள் செய்வதை நிறுத்திக் கொண்டு, உண்மையாகவே செயலில் இறங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img