ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்: பெரியவா

“என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், .அகிஞ்சனன்.”……..(ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்) பெரியவா

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்ட பிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)

‘பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்’ ?

சொன்னவர்-பிரும்மஸ்ரீ டி.எஸ்.நடராஜ சாஸ்திரிகள் …………………………(ஸ்தானீகர்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம் நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம் வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான் இருந்தது. ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில் கவனம் செலுத்தினார்கள். ‘ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன் நித்ய பூஜா டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி பணித்தார்கள், புதுப் பெரியவாள்.

டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக் கொண்டு நானும் செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.

மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு கிராமத்தில் முகாம். முகாம் இருப்பிடத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு சென்றோம். பெரியவாள் முன்னிலையில் நின்றோம்.

அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.

‘தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர் பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்…’

‘முதலில் பிரசாதம் கொடு’-என்று சமிக்ஞை.

ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா,வாடிப்போன நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.

குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள்.

“இன்னும் என்ன இருக்கு..”

‘அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..’

மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ். நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.

“ஸ்தானீகரைக் கூப்பிடு..”

நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம் அருட்புனலால் ஒரு நீராட்டு.

“நீ….சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.

‘ஆமா..’

“என்ன ஒற்றுமை பார்! நான் பட்டத்துக்கு வந்தபோது ,அவர்தான் சாதரா கொண்டு வந்து, பூவாலேயே அபிஷேகம் பண்ணி… ஹ்ம்?.. அப்புறம் பிரசாதம் கொடுத்தார். மடத்தின் மூலமா, அவருக்குப் பதில் மரியாதை கூடப் பண்ணினோம். ..தெரியுமோ?….”

‘அப்பா சொல்லியிருக்கார்…’

யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.

“நீயும் அவரைப்போலவே…சாதரா,நிர்மால்யம், குங்குமம் கொண்டு வந்திருக்கே. உனக்கும் பதில் மரியாதை செய்யணும்… ஆனா.. என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன். (ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்..)

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டபடியால், இவ்வாறு கூறினார்கள்.)

மௌன இடைவெளி.

“இவனுக்கு,ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால், தேவலை. உங்களால் யாராலேயாவது முடியுமோ?…”

அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது?

சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால்,பெரியவாள் முத்திரைப் பவுன் அல்லவா,கேட்கிறார்கள்.?

இந்தப் பரபரப்பில்,எனக்கு அழுகையே வந்து விட்டது. ‘பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்’ என்று மனம் பரிதவித்தது.
கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்தேன்.

‘பெரியவாளோட அனுக்ரஹம் எங்களுக்கு இருந்தால் போதும்..காமாக்ஷி கருணையிலே நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம். விம்மினேன், பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள்.

“இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு. கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்…”

ஆனால்,பெரியவாள் வெற்றுச் சொல்லுடன் நின்றுவிடவில்லை.முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தனிகரிடம் சொல்லி, விரைவில் முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.

ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும் பரமாசார்யாளுக்குமிடையே, எந்த ஒரு பேதத்தையும் காண்பதில்லை….

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories