December 6, 2025, 3:55 AM
24.9 C
Chennai

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;

பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)

சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும் பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய நிலையில் இருந்தன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு பணியாளர் இருந்தார். ராஜகோபால அய்யங்கார் என்று பெயர். கோயிலில் அவருடைய பணி – இரவில் ரங்கநாதப் பெருமாள் பள்ளியறைக்குச் செல்லும்போது, சாம வேதத்தின் இந்தப் பகுதிகளை ஓதுவதுதான். குடும்பம் நடத்துவதற்குப் போதிய  வருமானம் இல்லாததால், பகல் நேரத்தில், ஒரு விறகுக் கடையில் கணக்கு எழுதும் வேலையையும் செய்துவந்தார்.

ஜைமினிய சாகைக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால்,ராஜகோபால அய்யங்காரைக் காப்பாற்றியாக வேண்டும்!

அவரையே ஆசிரியராக்கி, போதுமான சம்பளம் கொடுத்து, 1963-ல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் அவருடைய சிஷ்யர் ஸ்ரீ மகரபூஷணம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு பாடசாலை நடந்து வருகிறது. இதுவரை (2007-கட்டுரை) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்ல முறையில் பயின்று தேர்ச்சி பெற்று வித்வான்களாகி இருக்கிறார்கள்.

ஸ்ரீ மகரபூஷணத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. ஜைமினீய சாகையை நாடாப்பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.

ஸ்ரீ மகரபூஷணம், பெரியவாளிடம் வந்தார்.

“நான் என்ன செய்யணும்னு உத்தரவாகணும்….”

“உன் அபிப்ராயம் என்னன்னு சொல்லு….”-பெரியவா

“டேப் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. ஆனா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாலே பெரியவாளிடம் தெரியப்படுத்தினேன்.

வேதத்தை நாடாப்பதிவு செய்வதை பெரியவாள் ஏற்றுக்கொண்டதேயில்லை. நாடாப்பதிவு செய்வதால் ஏற்படும் தீமைகளை மகரபூஷணத்திடம் விளக்கினார்கள்.

மகரபூஷணத்துக்கு பெரியவாள் வாக்கு, பெருமாள் வாக்கு.

அவருடைய வேதக்குரல் நாடாவில் பதிவாகவில்லை. ‘அரங்கன் கேட்டு மகிழ்ந்தாலே போதும்’என்ற முதிர்ச்சி.

இதே மகரபூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும் அழைப்பு வந்தது. போனால் ‘சில லகாரங்களுடன் வரலாம்; பல விகாரங்களுடனும் வரலாம்’.

“நான் போகப்போவதில்லை…” என்று சொல்லி தெண்டன் சமர்ப்பித்தார் மகரபூஷணம்.;

“ரொம்ப சரி,பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;…………………….பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories