திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு தெப்ப உற்ஸவம் நாளை தொடங்கி 9-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
நாளை முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் ராமருடன் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
அடுத்து 2 -வது நாளான நாளை மறுதினம் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி 3 சுற்றுகளும் , கடைசி 3 நாட்களான 7, 8 மற்றும் 9 -ஆம் தேதிகளில் ஸ்ரீதேவி , பூதேவி சமேத மலையப்ப சுவாமி 7 சுற்றுக்கள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த தெப்ப உற்சவம் கோலாகலமாக நடக்கும். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.