“உனக்கு விழுகிற அடியைத் தடுப்பதற்கில்லை. ஆனாலும் அதிகம் வலிக்காதபடி நான் பார்த்துக் கொள்வேன்” ‘கை கொடுக்கும் வளையல்’ தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். பெரியவாளை தரிசிப்பதற்காக நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி வந்திருந்தார். அந்த சமயம் பிராமணர் ஒரூவர் தன் மகளின் திருமணத்திற்கு ஏதானும் உதவி செய்யும்படி கேட்டு வந்திருந்தார். “நீ ஏதாவது உதவி செய்யேன் இவருக்கு” என்றார்கள் ஸ்வாமிகள். அம்மையாரும் மன சந்துஷ்டியுடன் தன் கையில் அணிந்திருந்த ஒரு ஜதை வளையல்களை கழற்றிக் கொடுத்தார். “இப்போதே கொடுக்கணும் என்றில்லை, கல்யாணத்திற்கு முன்னதாகவே கொடுத்தால் போறும்” என்றார்கள். அதே சமயம் அருகிலிருந்த உள்ளூர் வங்கி மேலாளரிடம், “வளையலை பாங்க் லாக்கரில் வைத்திரு” என்றும் கூறினார்கள். இரண்டே நாளில் மீண்டும் அந்த பிராமணர் ஸ்வாமிகளைத் தேடி வந்தார்.பெரியவாளின் பாதக் கமலங்களில் விழுந்து அழுதபடியே கூறினார். “என் பொருட்கள் எல்லாம் திருடுபோய் விட்டது” என்று. அப்போது அவரின் உடமையாக இருந்தது லாக்கரில் உள்ள வளையல் மட்டுமே. ஸ்வாமிகளின் ஞானதிருஷ்டியினால் தான் அவரின் வளையல் திருடு போகாமல் தப்பித்தது. வளையலின் மதிப்பு அன்று இருபது ஆயிரம் ரூபாய். “உன் நல்ல வேளை வளையல் தப்பிச்சது” என்று கூறி அவரை ஆசிர்வதித்தார். எது உனக்கென்று விதிக்கப்பட்டதோ அது உனக்குரியது ஆகும்! எது உன்னுடையதில்லையோ அது உன்னை விட்டுப் போகும்! உனக்கு விழுகிற அடியைத் தடுப்பதற்கில்லை. ஆனாலும் அதிகம் வலிக்காதபடி நான் பார்த்துக் கொள்வேன்.
‘கை கொடுக்கும் வளையல்’
Published:

