‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக
க்ஷண நேரத்தில் மாற்றி, ‘மஹா பெரியவாள் விருந்து’ என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
சென்னையில் பெரியவா ஒருவித்வன் மகாசபைக்கு
எழுந்தருளினார். பலர் பேசினார்கள்.அவர்கள் எக்காரணத்தாலோ முதலில் ஸ்ரீ பெரியவாளுக்கு
அளித்திருக்க வேண்டிய வரவேற்புரையை வாசித்து
அர்ப்பணம் செய்யாமலிருந்து விட்டார்கள்.
விழா மத்தியில்தான், முதலில் செய்ய வேண்டியதை
மறந்தோமே என்று நிர்வாகிகள் வெட்கமும் வருத்தமும்
அடைந்தார்கள். ஒருவர் கூசிக் குறுகிக்கொண்டு,
“ஸபா ஜனப் பத்திரிகை வாசித்துத் தரணும்”
என்று பெரியவர்களிடம் ஈன ஸ்வரத்தில் கூறினார்.
அவர்களது கலக்கத்தைப் புரிந்து கொண்டார் அருளாளர்.
பலத்த களிப்புச் சிரிப்புடன், “ஸ பாஜனப் பத்திரிகைதானே?
எப்போது தந்தால் என்ன?” என்ற இரண்டே வாக்கியங்களைப்
பெரியவாள் சொன்னதுதான் தாமதம், கூடியிருந்தவரெல்லாம்
புலவர்களானதால் புளகாங்கிதமாகிக் ‘கொல்’லென்று
சிரித்து விட்டார்கள். பாஜனம் என்றால் பக்தி செய்வது என்றும், பங்கு
போட்டுக் கொள்வது என்றும் அர்த்தம். பக்தியோடு
தரும் பத்திரிகை ‘ஸ பாஜன’ப் பத்திரிகை.பக்திக்கு முன்பின்
என்ற காலநிர்ணயம் எதற்கு? இன்னும் ஒரு படி மேலே
போனால்,பெரியவாள் சபையோரை பக்தர் என்றும்
தம்மை பக்திக்குரியவர் என்றும் பிரித்து எண்ணவில்லை.
எல்லோருமே ஒன்றுகூடி ஆனந்தத்தைப் பங்கு போட்டுக்
கொள்பவர்கள் என்றே எண்ணினார். அப்படி பங்குதாரர்களாக
ஒட்டி நிற்கின்றபோது சம்பிரதாய விதிகளுக்கு
அங்கு ஏது இடம்.
‘ஸபா ஜன’ப் பத்திரிகையை ‘ஸ பாஜன’ப் பத்திரிகையாக
க்ஷண நேரத்தில் மாற்றி, ஒரு கூட்டத்தின் கூம்பிய
மனத்தையே சடேரென மலர்வித்து மாற்றிய அருமையே அருமை


