“அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்”

“அஷ்டமி-நவமி-பிரதமை திதிகள்”
 
(அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்12705540 1113504875361343 8388843943677516806 n - 2026கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.என்பதால் அந்த திதிகள் வருத்தப்பட்டனவாம் இறைவினடம்.-அதன்படி ஸ்வாமி நவமியில் ராமனாகவும் அஷ்டமியில் கிருஷ்ணனாகவும், பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.)
 
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி வரகூரான் நாராயணனால் டைப் செய்யப்பட்டது)
 
அனுராத [அனுஷம்] நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் அதிர்ஷ்டம் இதற்க்குத்தான். ஏனெனில் வேதத்திலேயே அனுராதாவை உயர்த்தி வைத்திருக்கிறது.எந்தக் காரியத்துக்கும் வேத வித்துகளிடமிருந்து உத்தரவு வாங்கிக் கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். அதனை அனுக்ஞை என்பர். இதற்கு உள்ள மந்திரத்தில் அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து [வேள்வி செய்து] மித்ரனின் [நண்பன்] அருளால் நூறாண்டுகள் இருக்க வேண்டுமென்று வேண்டப்படுகிறது.வேத,வேள்வி தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும் எப்படி இருக்கிறது பாருங்கள்!.
 
பெரியவா பிறந்த திதி பிரதமை.பதினைந்து திதிகளில் அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை. எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.
 
இதற்காக இந்த மூன்று திதிகளும் இறைவனிடம் சென்று அழுதனவாம்.”நீதான் எல்லா திதிகளும் என்று மந்திரம் இருந்தாலும்,எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே! நாங்கள் என்ன தவறு செய்தோம்” என்று கேட்டனவாம்.
 
உடனே ஸ்வாமி,”அப்படியா? கவலையை விடுங்கள்… மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக் கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!” என்று ஆறுதல் தந்தார்.
 
அதன்படி நவமியில் ராமனாகவும் ,அஷ்டமியில் கிருஷ்ணனாகவும்,பிரதமையில் பரமாசார்யாளாகவும் அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.
 
அதிலும் இந்த பிரதமைக்கு ‘போனஸ்’ என்னவென்றால், மாதத்தில் இரண்டு அஷ்டமி,இரண்டு நவமி,இரண்டு பிரதமை வருகிறது.அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார்.ஒன்றை விட்டுவிட்டார்.நவமியிலும் அவ்வாறே செய்தார்.
 
ஆனால்,பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்
.
கிருஷ்ணபட்சப் பிரதமையில் பெரியவா பிறந்தார்.சுக்லப்பட்சப்பிரதமையில் மறுபிறவி எடுத்தார்.அதாவது சந்நியாசம் பூண்டார். ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
 
ஒரு வேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமே என்று பச்சாதாப்பட்டு இப்படி செய்தார் போலும்.
 
[கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் யுகங்கள்கடந்து விட்டதல்லவா]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories