துன்பம் நீங்கி அனைத்து மதிப்புகளும் பெற்று ஒளிர்வது யார்? விதுரர் கூறும் நீதி!

vithura neethi

e0aea4e0af81e0aea9e0af8de0aeaae0aeaee0af8d e0aea8e0af80e0ae99e0af8de0ae95e0aebf e0ae85e0aea9e0af88e0aea4e0af8de0aea4e0af81 e0aeae 1 - 2026

விதுர நீதி :
{விதுரன் சொன்னார்} “ஓ! திருதராஷ்டிரரே,
1.போதையில் இருப்பவன்,
2.கவனம் குறைந்தவன்,
3.உளறுபவன்,
4.களைப்பாக இருப்பவன்,
5.கோபம் கொண்டவன்,
6.பசியோடு இருப்பவன்,
7.அவசரப்படுபவன்,
8.பேராசை கொண்டவன்,
9.பயம் கொண்டவன்,
10.காமம் கொண்டவன்
ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள்.

மன்னன் செழிப்பை அடைய வேண்டுமானால்
1.காமத்தை துறந்தவனாக,
2.கோபத்தையும் துறந்தவனாக,
3.தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து,
4.பாகுபாட்டை அறிந்து,
5.கல்வி கற்று,
6.சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களுக்கும் அதிகாரியாகக் கருதப்படுகிறான்.
7.பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும்,
8.குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும்,
9.தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும்,
10.கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதை அறிந்தவனுமான மன்னனையே செழிப்பு அடைகிறது.

1.பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும்,
2.எதிரியைப் பொறுத்தமட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்;
3.தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்;
4.சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்துபவனும் ஞானியாவான்.
5.ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும்,
6.தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும்,
7.துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமே
நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன்.
அவனது எதிரிகள் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.

1.பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும்,
2.பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும்,
3.அடுத்தவன் மனைவியை சீரழிக்காதவனும்,
4.ஆணவத்தைக் காட்டாதவனும்,
5.திருடாதவனும்,
6.நன்றிமறக்காதவனும்,
7.குடியில் ஈடுபடாதவனும்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
8.கேட்கப்படும்போது உண்மையைச் சொல்பவனும்,
9..நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும்,
10.அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும்
ஞானி என்று கணிக்கப்படுகிறான்.

1.பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும்,
2.அனைவரிடமும் அன்பாக இருபவனும்,
3.பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும்,
4.ஆணவமாகப் பேசாதவனும்,
5.சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படுகிறான்.
6.கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும்,
7.பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும்,
8.தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும்
அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான்.
9.பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும்,
10துயரத்தில் இருக்கும்போதும், முறையற்ற செயலைச் செய்யாதவனும் நன்னடத்தையுள்ளவன் ஆரியர்களில் சிறந்தவன் என்று மரியாதைக்குரியவர்களால் கருதப்படுகிறான்.

1.தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும்,
2.அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும்,
3.கொடையளித்துவிட்டு அதற்காகவருந்தாதவனும்,
4.நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான்.
5.பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும்,
6.பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும்,
7.பல்வேறு வகைகளிலான மனிதர்களின் சாதி தர்மங்களை அறிய விரும்புபவனும்,
8.ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
..
1.செருக்கு,
2.மடமை, {முட்டாள்தனமான} துடுக்குத்தனம்,
3.பாவச்செயல்கள்,
4.மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது,
5.நடத்தையில் கோணல்,
6.பலருடன் பகைமை,
7.குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு
ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான்.

1.தன்னடக்கம்,
2.தூய்மை,
3.நல்ல சடங்குகள்,
4.தேவர்களை வழிபடுதல்,
5.பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சடங்குகள்
ஆகியவற்றைத் தினமும் பயிலும் மனிதனுக்கு தேவர்களே செழிப்பை அளிக்கின்றனர்.
… ….
1.தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் மண உறவு கொள்பவனும்,
(வசதி,குலம் போன்றவற்றில் சமநிலையில் உள்ளவர்களிடம் மணஉறவு வைத்துக்கொள்ள வேண்டும்)
2.தன் முன் மேம்பட்ட தகுதியுடைவயர்களை அமர்த்துபவனும்,
(தன்னைவிட மேம்பட்ட தகுதியுடையவனை தனக்கு கீழ் அமர்த்தக்கூடாது)
3.சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனின் செயல்கள், கருத்தில் கொள்ளவும், பயன்படுத்தவும் ஏற்றவை ஆகும்.

1.தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்துவிட்டு மிதமாக உண்பவனும்,
2.அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும்,
3.யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் கொடுப்பவனும் {தானம் அளிப்பவனும்},
தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான்.
அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
….
1.எவனுடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ {கமுக்கமாக பாதுகாக்கப்பட்டு}, நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ,
2.எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான்.

1.அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும்,
2.உண்மையுள்ளவனும்,
3.மென்மையானவனும்,
4.ஈகை குணம் கொண்டவனும்,
5.தூய மனம் கொண்டவனும்,
அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல,
தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான்.
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அதற்காக {அக்குற்றங்களுக்காக} வெட்கப்படுபவன்,
அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான்.
தூய இதயத்துடனும்,
அளவிலா சக்தியுடனும்,
சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான்.

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories