இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

yugadhi wishes - 2026

சாந்திரமான ஸம்வத்ஸராதி- உகாதி (19-03-2026) வியாழன் இன்று தொடங்குகிறது.

பொதுவாக வருஷம் என்பது சாஸ்திரப்படி ஸாவனம், சௌரம், சாந்திரம், நக்ஷத்திரம், பார்ஹஸ்பத்யம் என்பதாக ஐந்து வகைப்படும். 30 நாள் கொண்டது ஒரு மாதம், 360 நாள் ஒரு வருஷம், என்று கணக்கிடுவது ஸாவன வருஷம்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்போது மாதப்பிறப்பு என்று 12 மாதங்களை கணக்கிடுவது சௌரமான வருஷம். தமிழகத்தில் வசிக்கும் நாம் சௌரமானத்தையே பெரும்பாலும் பின்பற்றுகிறோம். சந்திரனின் போக்கையொட்டி (அமாவாசைக்கு மறுநாள் முதல்) கணக்கிடுவது சாந்திரமான மாதம்- வருஷம்.

நக்ஷத்ரங்களில் முதன்மையான அசுவதி நக்ஷத்ரத்தை மாதப் பிறப்பாகக் கணக்கிட்டு 27 நாட்கள் ஒரு மாதம் என்று 12 மாதங்களை கணக்கிடுவது நாக்ஷத்ரமானம். ஜோதிஷ சாஸ்திரப்படி தசைகள், புக்திகளின் அளவுகளைக் கணக்கிட இது உபயோகப்படுகிறது.

பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தின் ராசி மாறுதலை வருஷப் பிறப்பாகக் கொள்வது பார்ஹஸ்பத்ய வருஷம். ஆக இவ்வாறு ஐந்து விதமாக வருஷ ஆரம்பம் கணக்கிடப்படுகிறது.

இவற்றில் கடைசியில் கூறப்பட்ட நாக்ஷத்ரம், பார்ஹஸ்பத்யம் ஆகியவை தர்ம சாஸ்திரத்தில் உபயோகமில்லை என்பதால் மூன்றுவித வருஷங்களே வழக்கத்தில் உள்ளது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இவற்றில் சாந்திரமான ஸம்வத்ஸரம் என்னும் வருஷம் பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமையான இன்று தொடங்குகிறது. தெலுங்கு – கன்னட – மொழி பேசும் மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் – சாந்திரமான வருஷத்தை பின்பற்றும் சிலருக்கும் இன்று புதிய வருஷம் ஆரம்பம்.

ஸ்ரீராமநவமி போன்ற விரதங்கள் சாந்திரமானத்தை ஒட்டியே வருகின்றன. புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல், பஞ்சாங்க படனம் போன்ற செயல்கள் அனைத்தும் இன்று நடக்கின்றன.

யுகாதி – உகாதி

புது வருடத்தின் முதல் நாளைக் குறிப்பிடுவதில், களிதெலுங்கில் ‘உகாதி’ என்றும், கன்னடத்தில் ‘யுகாதி’ என்றும் உச்சரிப்பில் சிறிய வேறுபாடு மட்டும் உண்டு. மஹாராஷ்டிரத்திலும் கொங்கணத்திலும் இந்நாளை ‘குடி பட்வா’ என்றழைப்பார்கள். சிந்தி வகுப்பனருக்கோ இந்நாள் ‘சேத்தி சந்த்’ ஆகும். வசந்தத்தை வரவேற்கும் விதமாய் அமைந்த பொன்னாள். வசந்த நவராத்திரியின் முதல் நாளும் இதுவே.

ஒரு யுகாதி நாளில் தான் நான்முகன் படைப்புத் தொழிலையும், மஹாவிஷ்ணு காலக் கணக்கையும் தொடங்கினார்கள் என்பது ஐதீகம். அன்றுதொட்டு காலமெனும் சக்கரம் சுழன்றபடியே இருக்கிறது. இலைகள் உதிர்வதும், பின் துளிர்விட்டுப் பூத்துக் குலுங்குவதும் , தகிக்கும் கோடையும், பெய்யெனப் பெய்யும் மழையும், நடுக்கும் குளிரும் மாறிமாறி வருகின்றன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

உகாதியின் பொருள்:

உகாதி= உ+க+ ஆதி
உ -என்பது நக்ஷத்திரம்
க- என்பது கமனம் (கதி, செல்லுதல்)
ஆதி என்பது நக்ஷத்திரத்தின் கதியைவைத்து கணிக்கத் தொடங்கிய நாள்
என்று அனுசரிக்கப் படுவது. (அல்லது)
யுகாதி=யுக+ஆதி .
யுகங்களின் ஆதி முதல் கணிக்கப்படும் காலம்.

யுகாதிக்குத் தயாராக வீட்டுக்கு வெள்ளையடித்து, அன்று மாலைகளும், தோரணங்களும் கொண்டு அலங்கரிப்பார்கள். தலைக்கு எண்ணை தேய்த்துக் குளித்தபின் புத்தாடை உடுத்தி வழிபாடு செய்வார்கள்.

இந்த நாளில் படைப்பு தொடங்கப் பட்டதால் பிரம்மனுக்கு வழிபாடு பிரதானம். வீட்டு வாசலில் கோலமிட்டு ஒரு கழியையோ கொம்பையோ நிறுத்துவார்கள்.
அதை பிரம்மனாக பாவித்து சந்தனம், குங்குமம். மலர்களால் அலங்கரித்து தூபதீபம் காட்டி நெய்வேத்தியம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன் பின்னரே பூஜையறையில் வழிபாடு.

பூஜைக்குப் பின் அனைவருக்கும் கொஞ்சம் யுகாதி பச்சடி வழங்கப் படும்.
புளி, வேப்பந்தளிர் மற்றும் பூ, வெல்லம், உப்பு, மாங்காய், பச்சை மிளகாய் இவற்றால் செய்யப் பட்டதே இந்தப் பச்சடி. இனிப்பு, கசப்பு என்று அனைத்தும் கொண்டதே நம் வாழ்க்கை என்று உணர்த்தும் பச்சடி.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இதை உட்கொள்வதற்கு முன், ஒரு சிறிய சுலோகம் சொல்வது மரபு. கீழ்க்கண்ட சுலோகமே அது :-

சதாயு வஜ்ர தேஹாய சர்வ சம்பத் கராய ச
சர்வாரிஸ்ட வினாசாய நிம்பகம் தள பக்ஷணம்

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories