“ஏகாதசி உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே வரதனுக்கும் தானா?”
இது தேவராஜ ரகசியம்! (வரதராஜருக்கு, தேவராஜன் என்று திருநாமம் உண்டு)
சொன்னவர்; டி.கே.அனந்தநாராயணன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பெரியவாள் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள். ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி ஆக்ஞையிட்டார்கள்.
அவரும் வந்து வந்தனம் செய்தார்.
“இன்னிக்கு என்ன திதி?”
பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.
“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே வரதனுக்கும் தானா?”
பட்டர் திகைத்துப் போய் நின்றார்.
“பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யல்லே?”
அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்…” என்று கலவரத்துடன் கோயிலுக்குத் திரும்பிச் சென்றார்.
விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரியவந்தது. அதைச் சரிப்படுத்தி, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிரஸாதத்தை ஸ்ரீபெரியவாளிடம் கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.
வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியம் நடக்கவில்லை என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?/
தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்! (வரதராஜருக்கு, தேவராஜன் என்று திருநாமம் உண்டு)


