ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரி தரிசனம்!

Published:

niraiputhari pooja in sabarimala - 2026

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரிக்காக தரிசனத்துக்குக் கூடினர்

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இருந்த சுபமுகூர்த்தத்தில் பூஜைகள் நடைபெற்றன.

தந்திரி கந்தரரு பிரம்மதத்தன் மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் நெல் கதிர் கட்டுகளை கொடியமரத்தின் அருகில் இருந்து கிழக்கு மண்டபத்திற்கும், பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீகோவிலிற்கும் கொண்டு சென்றனர். அதன் பின்னர் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகள் முடிந்த பின் நெல் கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பூஜைகளை காணவும் நெல் கதிர்களைப் பெறவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதலே காத்திருந்தனர்.

தொடர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் பூஜா பூஜை பஸ் ஸ்டாபிசேகம் உச்சிக்கால பூஜை மாலை தீபாராதனை இரவு புஷ்பாஞ்சலி படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.

திரளான பக்தர்கள் தற்போது கேரளாவில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் நல்ல தண்ணீர் வந்ததால் பக்தர்கள் ஆனந்தமாக நீராடி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் ‌பூஜைகள் முடிந்த பின் இன்று இரவு 10 மணிக்கு கோவில் மூடப்பட்டு இனி ஆவணி மாதம் பூஜைக்கு சபரிமலை நடை திறக்கும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இதுபோல் நிறைபுத்தரிசி பூஜை கேரளாவில் பிரசித்தி பெற்ற அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி உட்பட முக்கிய கோவில்கள் அனைத்திலும் இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றது.

தமிழகத்திலும் நிறைபுத்தரிசி பூஜை முக்கிய கோவில்களில் இன்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவில், சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி கோவில், திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் உட்பட முக்கிய கோவில் நிறைபுத்தரசி பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.

அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் முன் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து சுவாமிக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img