மதுரையின் மத்தியில் இருப்பதால் மத்யபுரிநாயகி என போற்றப்படும் அம்பிகையை வேண்டிக்கொள்ள, திருமணம் இனிதே கை கூடுகிறது. அதனால் இந்தத் தாய் மாங்கல்ய வரப் பிரசாதினி எனப்படுகிறாள். இத்தேவி நின்றருளும் தாமரை பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்வதே வழக்கம். இங்கு கல்ஸ்ரீசக்ரம் வித்தியாசமானதாகக் கருதப்படுகிறது.
பத்து தளங்களைக் கொண்ட தசதளவில்வம் இத்தல விருட்சம். ஊர்ப் பெயரை ஒட்டி இத்தல ஈசன் மதுரநாயகர் என்று இறைவி மதுரநாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். பூலோக கைலாயம் என அழைக்கப்படும் இத்தலம் மதுரைமீனாட்சியம்மன் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் உள்ளது.


