இமை போல் காக்கும் நாகம்மன்

அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம்.
naga amman - 2026

 இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் திருவாமாத்தூர் என்னும் பழமையான திருத்தலம் உள்ளது. இங்குள்ள முத்தாம்பிகை சமேத  அபிராமேஸ்வரர் ஆலயம் தேவார மூவரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது. அங்கே திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. ஆயிரம் சாட்சிகளை விசாரித்தும் உண்மை விளங்காத வழக்குகளை இந்தத் திருவட்டப்பாறை தீர்த்துவைக்கும் என்பர். சத்தியத்தை நிலைநாட்டும் பாறை. ஒரு சமயம், தன் தம்பியின் சொத்துகளை அபகரிக்க எண்ணிய அண்ணன் ஒருவன், இப்பாறைமுன் பொய்யுரைத்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். சில கல் தொலைவு சென்றதும், அவன் அம்மனை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, “திருவட்டப்பாறை தெய்வம் சீறிக்கொத்துமோ?’ என்று ஏளனமாகக் கேட்டான். அவ்வளவில் பூமியிலிருந்து வெளிப்பட்ட கருநாகம் ஒன்று சீறி அவனைக் கொத்தியது. அனைவரும் வியந்து நிற்க, அந்த நாகத்தின் தலை மட்டும் பூமிக்கு மேலே தெரியும் நிலையில் கல்லாக மாறியது. அந்த நாகம்மனை மக்கள் வழிபடத்தொடங்கினர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

அவளே தும்பூர்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறாள்.

(இதன் வால் திருவாமாத்தூர் அம்மனிடம் உள்ளதாகக் கூறுகிறார்கள்).

ஆலயக் கருவறையில் நாகம்மன் எழுந்தருள, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் எழிலுடன் விளங்குகின்றன. கடந்த 16-9-2013 அன்று இங்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

“”இந்த நாகம்மனை உள்ளன்போடு வழிபட்டால், கண்ணிமைபோல நம்மைக் காத்தருள்வாள்” என்கிறார் ஆலய அர்ச்சகர் வெ. அபிராம சர்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories