ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்ற தமிழக இளைஞர்..

மணப்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவர் என்.பாலமுருகன் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

IMG 20220622 WA0035 - 2026

கோவையில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்திய சார்பில் கலந்துக்கொண்டு 4 தங்க பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய மணப்பாறையை சேர்ந்த என்.பாலமுருகனுக்கு பேருந்துநிலையம் பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுகவினர் தாரைத்தப்பட்டைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ்நகரை சேர்ந்தவர் பாலமுருகன். வலு தூக்கும் வீரரான இவர் விளையாட்டு வீரருக்கான ஒதுக்கீட்டின் கீழ் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதலாம் ஆண்டு தாவரவியல் பயின்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவில் பங்கேற்று பதங்களை வென்றவர் பாலமுருகன். தற்போது, கோவையில் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனம் இணைந்து கடந்த 17-ஆம் முதல் 21- ஆம் தேதி வரையில் நடந்திய ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் இந்திய சார்பில் பாலமுருகன் கலந்துக்கொண்டார். போட்டியில் இந்தியா, சீனா, ஓமன், ஜப்பன் உள்ளிட்ட 13 நாடுகளிலிருந்து 197 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் மூத்தோர் ஆகிய 3 பிரிவுகளில் பென்ச் பிரஸ், ஸ்கோடு, டெத் கிளிக் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 120+ வகையின் கீழ் கலந்துக்கொண்ட பாலமுருகன் 4 வகை போட்டிகளிலும் வென்று 4 தங்க பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையில் 655 கிலோ வலுவை தூக்கி பாலமுருகன் சேம்பியன்சிப்பை வென்றுள்ளார்.

பதக்கங்களை வென்று ஊர் திரும்பிய பாலமுருகனுக்கு மணப்பாறை பேருந்து நிலையத்தில், பாட்டாசு வெடித்து தாய் மற்றும் சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுகவினர் தாரைத்தப்பட்டைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மணப்பாறை மண்ணிற்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பேன் எனக்கூறிய பாலமுருகன் தனது வெற்றிக்கு உதவி செய்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், தமிழ்நாடு வலுதூக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories