இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கோப்பை வென்று அசத்திய இந்திய அணி!

eng vs ind first odi - 2026
  • K.V. பாலசுப்பிரமணியன்

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது, இறுதி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் – பந்த், பாண்ட்யா அபார ஆட்டம்

17 ஜூலை 2022 ஞாயிறு அன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை (45.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 ரன், ஜாஸ் பட்லர் 60, ஜேசன் ராய் 41, மொயின் அலி 34, ஓவர்டன் 32, ஹார்திக் பாண்ட்யா 4/24, சாஹல் 3/60) இந்திய அணி ( 42.1 ஓவரில் 261/5, பந்த் 125 ஆட்டமிழக்கவில்லை, பாண்ட்யா 71, டாப்லீ 3/35) ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னார். அதன் பலனை இரண்டாவது ஓவரில் இந்திய அணி பெற்றது. ஷமி பந்து வீச்சில் ஜானி பெயர்ஸ்டோ, ஜோ ரூட் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ராய் (41), பென் ஸ்டோக்ஸ் (27), பட்லர் (60), மொயின் அலி (34), லிவிங்ஸ்டோன் (27), ஓவர்டன் (32) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

ஹார்திக் பாண்ட்யா (24 ரன்னுக்கு 4 விக்கட்), சாஹல் (60 ரன்னுக்கு 3 விக்கட்), ஷமி (66 ரன்னுக்கு 2 விக்கட்) எடுத்தனர். பின்னர் ஆடவந்த இந்திய அணியின் முதல் நாலு பேட்டர்களும் வழக்கம்போல் சொதப்பினர். தவான் (ஓரு ரன்), ரோஹித் ஷர்மா (17 ரன்), விராட் கோலி (17 ரன்), சூர்யகுமார் யாதவ் (16) ரன் என ஆட்டமிழந்து வெளியேறினர்.

இக்கட்டான நிலையில் ரிஷப் பந்தும் (125 ரன் ஆட்டமிழக்காமல்) ஹார்திக் பாண்ட்யாவும் (71 ரன்) நிலைத்து ஆடி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். அதிலும் குறிப்பாக 42ஆவது ஓவர் ஆரம்பிக்கும்போது இந்திய அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது.

ரிஷப் பந்த் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் ஐந்து பவுண்டரிகளை வரிசையாக அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஹார்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories