IND Vs SL ODI: 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி!

ind vs sl odi - 2026

இந்தியா-இலங்கை மூன்றாவது ஒருநாள் ஆட்டம் – திருவனந்தபுரம்
– 15 ஜனவரி 2023
317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் தொடரில் இறுதிப் போட்டி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி (390/5. விராட் கோலி 166*, ஷுப்மன் கில் 116, ரோஹித் ஷர்மா 42, ஷ்ரேயாஸ் ஐயர் 38, ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கட்டுகள்) இலங்கை அணியை (22 ஓவர்களில் 73 ரன் ஆல் அவுட், சிராஜ் 4/32, ஷமி 2/20, குல்தீப் 2/16)

பூவா தலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மட்டையாட முடிவு செய்தார். அவர் 49 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேற, கில் மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்கள். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்தார்கள். கில்லுக்கு இது இரண்டாவது ஒருநாள் போட்டி; அதிலும் சதம். விராட் கோலிக்கு இது 46வது ஒருநாள் போட்டி சதமாகும். கில் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் கிடைத்தது.

இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியை மட்டுமே அளித்தார்கள். மிக அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் இலங்கை அணியின் முதல் வரிசை வீரர்களை உடனுக்குடன் வீழ்த்தி சரிவை ஆரம்பித்து வைத்தார். இதிலிருந்து மீளவே முடியாத இலங்கை அணி இறுதியில் 22 ஓவர்களில் 73 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் பத்து ஓவர்கள் பந்து வீசி அதிலே ஒரு மெய்டனும் வீசி, 32 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சாமி மற்றும் குல்தீப் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது.

கோலியின் சாதனைகள்:
கோலி இந்த ஆட்டத்தில் அடித்த சதம் மூலம் இந்திய மண்ணில் அதிக சதமடித்த வீரராகிறார். விராட் கோலி (21 சதங்கள், 105 மேட்சுகளில்), சச்சின் டெண்டுல்கர் (20 சதங்கள், 164 மேட்சுகளில்). இலங்கைக்கு எதிராக அதிக (மொத்தம் 10) சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைச் செய்தார். 85 பந்துகளில் சதமடித்த விராட் கோலி அடுத்த 25 பந்துகளில் 66 ரன் அடித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. மேலும் கோலி இந்த ஆட்டத்தில் 85 ரன்கள் ஆடித்தபோது ஒருநாள் போட்டிகளில் 20000 ரன்களைத் தாண்டியுள்ளார். ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் விராட் கோலி பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories