Ind Vs Eng T20: அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து அணி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து ஐந்தாவது டி-20 ஆட்டம்- மும்பை-2 பிப்ரவரி 2025

அபிஷேக் ஷர்மாவிடம் இங்கிலாந்து அணி தோற்றது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவர்களில் 247/9, அபிஷேக் ஷர்மா 135, ஷிவம் துபே 30, திலக் வர்மா 24, சஞ்சு சாம்சன் 16, அக்சர் படேல் 15, ப்ரைடன் கார்ஸ் 3/38, மார்க் வுட் 2/32, ஆர்ச்சர், ஓவர்டன், அதில் ரஷீத் தலா 1 விக்கட்) இங்கிலாந்து அணியை (10.3 ஓவர்களில் 97, பில் சால்ட் 55, பெதல் 10, ஷமி 3/25, வருண் சக்ரவர்த்தி 2/25, ஷிவம் துபே 2/11, அபிஷெக் ஷர்மா 2/3, ரவி பிஷ்னோய் 1/9) 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் இந்திய அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் அர்ஷதீப் சிங்கிற்குப் பதிலாக முகமது ஷமி ஆடினார்.

          இந்திய அணியின் தொடக்கத்தில் இருந்தது. இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் சஞ்சு சாம்சன் (16 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பிறகு விக்கட்டின் ஒருபுறம் விக்கட்டுகள் சம இடைவெளியில் விழுந்துகொண்டிருந்தபொதிலும் அபிஷேக ஷர்மா (54 பந்துகளில் 135 ரன், 7 ஃபோர் 13 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (15 பந்துகளில் 24ரன்) சூர்யகுமார் யாதவ் (2 ரன்) ஷிவம் துபே (13 பந்துகளில் 30 ரன்), ஹார்திக் பாண்ட்யா (6 பந்துகளில் 9 ரன், 1 சிக்சர்) ரிங்கு சிங் (6 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) ஆகியோர் அபிஷேக ஷர்மாவிற்கு மபனி கொடுத்தனர். இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 247 ரன் எடுத்தது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          அதன் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (23 பந்துகளில் 55 ரன்) மற்றும் ஜேகப் பெதல் (7 பந்துகளில் 10 ரன்) ஆகிய் ஐருவர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். இந்த சமயத்தில் பந்து வீச வந்த இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கட்டுகளயும் ரவி பிஷ்னோய் ஒருவிக்கட்டையும் எடுத்தனர். மீதமுள்ள மூன்று விக்கட்டுகளையும் முகம்மது ஷமி எடுத்தார்.10.3 ஓவருக்குள் இங்கிலாந்து அணி 97 ரன் களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

          ஆட்ட நாயகனாக அபிஷேக் ஷர்மா அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 4-1 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை வென்றுள்ளது.

          அடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது ஆட்டம் நாக்பூரில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

சாதித்த அபிஷேக் சர்மா

தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர், 37 பந்துகளில் 5 பவுண்டரி, 10 சிக்சருடன் 100 ரன்களைக் கடந்தார்.

இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா தலா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.

அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories