
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து கிரிக்கட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்கள் ஆடவுள்ளது. இந்திய ஒருநாள் அணியில் ஷுப்மன் கில் அணித்தலைவராக இருந்தார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி அணியில் விளையாடினர்.
முதல் ஒருநாள் ஆட்டம் வதோத்ராவில் ஜனவரி 11ஆம் நாள் நடந்தது. நியூசிலாந்து அணி முதலில் ஆடி 50 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 300 ரன் எடுத்தது. இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலி (93 ரன்), ஷுப்மன் கில் (56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (49 ரன்), கே.எல். ராகுல் (29 ரன்), ஹர்ஷித் ராணா (29 ரன்), ரோஹித் ஷர்மா (26 ரன்) நன்றாக விளையாடினர்.
இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 14இல் ராஜ்கொட்டில் நடந்தது. இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 284 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 286 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய அணியில் கே.எல். ராகுல் 112 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் ஆட்டமிழக்காமல் 131 ரன் எடுத்தார்.
மூன்றாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 18இல் இந்தூரில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 337 ரன் எடுத்தது. இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 296 ரன் மட்டுமே எடுத்ததால் ஆட்டத்தில் தோல்வியுற்றது. நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் 137 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 106 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியில் விராட் கோலி 124 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 53 ரன், ஹர்ஷித் ராணா 52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
டி20 ஆட்டங்கள்
முதல் டி20 ஆட்டம் ஜனவரி 21இல் நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி 7 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 84 ரன், ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன் எடுத்தனர்.
இரண்டாவது டி20 ஆட்டம் ஜனவ்ரி 23இல் ராய்ப்பூரில் நடந்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது. இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 82 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
மூன்றாவது ஆட்டம் இன்று (25. ஜனவரி 2026) கௌஹாத்தியில் நடைபெற்றது. பூவாதலையாவில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹர்ஷித் ராணாவின் முதல் ஓவரில் டேவன் கான்வாய் ஆட்டமிழந்தார். கிளன் பிலிப்ஸ் (48 ரன்), மார்க் சாப்மன் (32 ரன்), மிட்சல் சாண்ட்னர் (27 ரன்), டேரியல் மிட்சல் (14 ரன்), டிம் செய்ஃபெர்ட் (12 ரன்) எடுத்தனர். பும்ரா 3 விக்கட் வீழ்த்தினார்.
இரண்டாவதாக விளையாடிய இந்திய அணியில் முதல் ஓவர் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (68 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (28 ரன்) ஜோடி அதிரடியாக ரன் எடுத்தது. ஷ்ரேயாச் ஆட்டமிழந்தபோது ஆடவந்த சூர்யகுமார் யாதவும் (57 ரன்) அதிரடியாக ஆடினார். இதனால் நியாசிலாந்து அணி 20 ஓவர்களில் சேர்த்த 153 ரன்னை இந்திய அணி 10 ஓவர்களில் எட்டியது. இதனால் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நாலாவது டி20 ஆட்டம் ஜனவரி 28இல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.




