இந்தியா நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடரில் வியந்த சில!

nz vs ind t20 - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

            நியூசிலாந்து கிரிக்கட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்கள் ஆடவுள்ளது. இந்திய ஒருநாள் அணியில் ஷுப்மன் கில் அணித்தலைவராக இருந்தார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி அணியில் விளையாடினர்.

          முதல் ஒருநாள் ஆட்டம் வதோத்ராவில் ஜனவரி 11ஆம் நாள் நடந்தது. நியூசிலாந்து அணி முதலில் ஆடி 50 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 300 ரன் எடுத்தது. இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலி (93 ரன்), ஷுப்மன் கில் (56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (49 ரன்), கே.எல். ராகுல் (29 ரன்), ஹர்ஷித் ராணா (29 ரன்), ரோஹித் ஷர்மா (26 ரன்) நன்றாக விளையாடினர்.

          இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 14இல் ராஜ்கொட்டில் நடந்தது. இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 284 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 286 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய அணியில் கே.எல். ராகுல் 112 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் ஆட்டமிழக்காமல் 131 ரன் எடுத்தார்.

          மூன்றாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 18இல் இந்தூரில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 337 ரன் எடுத்தது. இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 296 ரன் மட்டுமே எடுத்ததால் ஆட்டத்தில் தோல்வியுற்றது. நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் 137 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 106 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியில் விராட் கோலி 124 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 53 ரன், ஹர்ஷித் ராணா  52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

டி20 ஆட்டங்கள்

          முதல் டி20 ஆட்டம் ஜனவரி 21இல் நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி 7 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 84 ரன், ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன் எடுத்தனர்.

          இரண்டாவது டி20 ஆட்டம் ஜனவ்ரி 23இல் ராய்ப்பூரில் நடந்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது. இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 82 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

          மூன்றாவது ஆட்டம் இன்று (25. ஜனவரி 2026) கௌஹாத்தியில் நடைபெற்றது. பூவாதலையாவில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹர்ஷித் ராணாவின் முதல் ஓவரில் டேவன் கான்வாய் ஆட்டமிழந்தார். கிளன் பிலிப்ஸ் (48 ரன்), மார்க் சாப்மன் (32 ரன்), மிட்சல் சாண்ட்னர் (27 ரன்), டேரியல் மிட்சல் (14 ரன்), டிம் செய்ஃபெர்ட் (12 ரன்) எடுத்தனர். பும்ரா 3 விக்கட் வீழ்த்தினார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

          இரண்டாவதாக விளையாடிய இந்திய அணியில் முதல் ஓவர் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (68 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (28 ரன்) ஜோடி அதிரடியாக ரன் எடுத்தது. ஷ்ரேயாச் ஆட்டமிழந்தபோது ஆடவந்த சூர்யகுமார் யாதவும் (57 ரன்) அதிரடியாக ஆடினார். இதனால் நியாசிலாந்து அணி 20 ஓவர்களில் சேர்த்த 153 ரன்னை இந்திய அணி 10 ஓவர்களில் எட்டியது. இதனால் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

          நாலாவது டி20 ஆட்டம் ஜனவரி 28இல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories