திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டின் முன்னே விஷம் அருந்திய காதலி!

poison 1

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் 25 வயதான அனிதா. இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடைப்பெற்று பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப்பெற்று தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஆத்தூரில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்று வந்திருக்கிறார். அங்கு 25 வயதான விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் விக்னேஷின் பெற்றோருக்கு தெரிய வரவே விக்னேஷை கண்டித்துள்ளனர்.

மேலும் அனிதா கடந்த 2016 ஆம் ஆண்டு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்த ஆறு மாதத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற விஷயத்தை அறிந்த விக்னேஷ் அனிதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விக்னேஷிடம் அனிதா கூறியதாக தெரிகிறது. விக்னேஷ் அதை ஏற்க மறுத்ததால் அனிதா கெங்கவல்லி காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று புகார் அளித்திருக்கிறார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

மனுவை பெற்றுக்கொண்ட போலிஸார் செவ்வாய்க்கிழமை அன்று விக்னேஷ், அனிதா ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். அதனடிப்படையில், அனிதா காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

ஆனால் விக்னேஷ் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அனிதா அவருக்குப் போன் செய்து பார்த்தபோது, அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், விக்னேஷின் நேராக வீட்டிற்கே சென்ற அனிதா, வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் குடும்பத்தாருக்கும் அனிதாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அனிதாதான் மறைத்து வைத்திருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கே மயங்கி கீழே விழுந்த அனிதாவை, அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தலைமறைவாக இருக்கும் விக்னேஷையும் தேடி வருகின்றனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories