பெற்றோரை விரட்டிய ஊர் மக்கள்! விரக்தியில் இளைஞர் தற்கொலை?

Thukku 5
Thukku 5

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பூபதி(28). இவர், சென்னையில் தனது பெற்றோருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேதாஜி நகரில் உள்ள தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் பூபதி ஈடுபட்டார்.

வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட கடந்த ஏப்ரல் மாதம் பூபதி வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, கொரோனா தொற்று அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், மீண்டும் சென்னை திரும்ப முடியாமல் அவர் வாணியம்பாடியிலேயே தங்கி கட்டிடப் பணிகளை கவனித்து வந்தார்.

அவரது பெற்றோர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இ-பாஸ் வாங்கிக்கொண்டு மகனைக் காண வாணியம்பாடிக்கு வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து வந்திருப்பதால், கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவர்களை திரும்பி அனுப்ப வேண்டும் என அக்கம்பக்கத்தினர் பூபதியிடம் வலியுறுத்தினர். இதனால், பூபதியின் பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், பூபதி மன வருத்தத்துடன் இருந்தார்.

இந்நிலையில், பூபதியின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாணியம்பாடி நகர போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சென்னையில் இருந்து மகனை பார்க்க வந்த பெற்றோரை அக்கம், பக்கத்தினர் விரட்டியடித்ததால் மனமுடைந்த பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பூபதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories