திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2 பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அறை எண்.88 (தரை தளம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 18.03.2022 மாலை 05.45க்குள் அனுப்பப்பட வேண்டும்
எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு இந்த https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/03/2022030345.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.