December 5, 2025, 1:32 PM
26.9 C
Chennai

அடுத்தடுத்து ரயில்களைக் குறிவைக்கும் தேச விரோதிகள்! திருச்சி அருகே ஒரு சதி!

trichy train track - 2025
#image_title

கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க நடந்த சதி குறித்து இப்போது விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது .திருச்சி அருகே நடந்தது என்ன என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அருகே தண்டவாளத்தின் நடுவே லாரி டயர்களை வைத்துச் சென்ற மர்ம நபர்களால், கன்னியாகுமரி விரைவு ரயிலில் பழுது ஏற்பட்டு நின்றது. ரயிலைக் கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் (12643) ஜூன் 1ம் தேதி மாலை 5.20க்கு வழக்கம் போல் சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த ரயில், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. கொள்ளிடம் பாலம் கடந்து, பிச்சாண்டார் கோவில் – வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 பெரிய லாரி டயர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். அதிவேகத்தில் ரயில் வந்து கொண்டிருந்ததால், டயர்கள் மீது ஏறியது. பின்னர் ரயில் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி ரயில் நடுவழியில் நின்றது. மோதிய வேகத்தில் என்ஜினில் இருந்த குழாய் பழுதடைந்தது. இதனால் ரயிலை மேலும் இயக்க முடியவில்லை.

நள்ளிரவு 1.05 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. பின்னர் பழுது நீக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக 1.45 மணிக்கு ரயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 31ஆம் தேதி லால்குடி அருகே மேல வாளாடி ரயில்வே தண்டவாளம் அருகே, பாலத்தின் கீழ் சாலைப் பணிக்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை.

இது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் மேல வாளாடியை சேர்ந்த நான்கு பேர், ரயில்வே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என ரயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அல்லது, ரயிலை கவிழ்க்கும் சதித் திட்டத்தில் மர்ம நபர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தென் மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் லாரி டயர்களை வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கேரளத்தில் ரயிலுக்கு தீ வைப்பு, வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர் கல்வீச்சுத் தாக்குதல்கள் என ரயில்களை மையமாக வைத்து மர்ம நபர்களின் தாக்குதல்கள் இருப்பதால், ரயில்வே போலீஸார் இதில் கூடுதல் கவனம் கொடுத்து விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories