December 8, 2025, 3:48 PM
28.2 C
Chennai

இந்தியாவின் விவசாய பாரம்பரியம்

இந்தியாவில் விவசாயம் புதியதாக தற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன் , காட்டு பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியினால் பெற்ற முறைகளை, அடுத்த தலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பழைய காலத்தில் விவசாயிகள் கலப்பு பண்ணை, கலப்பு பயிர்கள், பயிர் சுழற்சி போன்ற இயற்கைக்கு தீங்கு சேர்க்காத விவசாய முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர்.

இந்தியாவில் பழங்கால விவசாயிகளின் ஆழ்ந்த அறிவினால் பழைய இந்தியா வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அவர்களின் அனுபவங்களை, தற்போதைய புதிய தலைமுறையினர், அதன் பலன்களை அறிந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பழைய காலத்து விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்ட விவசாய முறைகள் தற்சமயம் அங்கக வேளாண்மை என்ற புதிய முறையாக பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.

விவசாயமானது, நல்ல மண் கொண்ட மலையடிவாரப் பகுதியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதியில், நீரை கட்டுப்படுத்த, நிறைய ஆற்றலும், புதிய தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் அங்கு ஆரம்பம் ஆகவில்லை.வேதகால விவசாயிகள், மண்வளம், விதை தேர்வு, விதைப்பு பருவம், அறுவடை, உரமிடுதல் போன்ற வேலைகளில் சிறிதளவு தெரிந்து கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள், பயிர் சுழற்சியினால், மண் வளத்தை மேம்படுத்த முடியும் எனவும் அறிவர்.

அவர்கள் 3 ஆண்டு பயிர் சுழற்சி முறையில், ஆழ் வேர் செடிகள், குறைந்த வேர் செடிகள் மற்றும் பயறு வகை பயிர்கள் இடம் பெற்று இருந்தன. கோதுமை-பட்டாணி, கரும்பு – பசுந்தாள் உரச் செடி, கோதுமை – துவரை, சோளம் போன்ற பயிர்கள் பயிர் சுழற்சியில் இடம் பெற்று வந்தன. கலப்பு பண்ணையில் பயிருடன் கால்நடை வளர்ப்பு செய்து வந்தனர். கலப்பு பயிர் முறையானது, பலதரப்பட்ட பயிர்களை கலந்து செய்வது அனுமதிக்கப்பட்டது. கோதுமையுடன் பட்டாணி மற்றும் இதர பயறு வகைகளை கலந்து பயிர் செய்தால், கோதுமையின் தழைச்சத்து தேவையை பயறு வகையினால் நிரப்பப்படுகிறது. சோளம்+துவரை+தட்டைப்பயறு, உளுந்து/பாசிப்பயிறு + Sorgham/ கம்பு, கோதுமை + பட்டாணி கோதுமை + பேய் எள் போன்ற பயிர் கலப்புகள் செய்யப்பட்டு பயிரிடப்பட்டு வந்தனர். ஆனால், பொதுவாக, தனி பயிர் முறை அங்கீகரிக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories