February 13, 2025, 11:42 AM
25.6 C
Chennai

சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

89. பலமே வாழ்வு!
பலவீனமே மரணம்!

ஸ்லோகம்:

வனானி தஹதோ வஹ்னே: சகா பவதி மாருத: |
ஸ ஏவ தீபநாசாய க்ருசே கஸ்யாஸ்தி சௌஹ்ருதம் ||
– சாணக்கிய நீதி 

பொருள்:

வனத்தில் தோன்றும் காட்டுத் தீக்கு காற்று நண்பனைப் போல் துணையாகிறது. அதே காற்று சிறிய தீபம் அணைவதற்கு காரணமாகிறது. பலவீனமானவர்களோடு யார் நட்பு கொள்வார்கள்?

விளக்கம்:

உடலால், மனதால், பொருளால் வலிமை பெற்றிருந்தால்தான் அனைவரும் நட்புக் கொள்ள விரும்புவார்கள் என்று எடுத்தியம்பும் ஸ்லோகம் இது.

சர்ஜிகல் ஆபரேஷன் மூலம் நம் நாட்டின் வலிமை வெளிப்பட்டது. அதன்பின் உலக நாடுகள் பல நமக்கு நட்புக் கரம் நீட்டின.

தனிமனிதன், சமுதாயம், நாடு எதுவானாலும் வலிமையோடு விளங்கினால்தான் கௌரவம். “பலவீனமானவர்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது” – “நா௨யமாத்மா பலஹீனேன லப்ய:” என்கிறது உபநிஷத்து. “பலவீனம் ஒரு பாவம்” என்பார் சுவாமி விவேகானந்தர்.

பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை அவமதிக்கத் தோன்றும். ஒரு பாவச் செயலைத் தூண்டுவது பலவீனம் என்கிறது சாஸ்திரம்.

பலவீனமான விலங்கு என்பதால்தான் ஆட்டினை பலி கொடுக்கிறார்கள். குதிரையையோ, யானையையோ, புலியையோ பலி கொடுக்க மாட்டார்கள் அல்லவா? என்று பலவீனம் குறித்து விவரிக்கும் ஸ்லோகம் ஒன்று பிரசித்தமாக உள்ளது.

அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச |
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பலகாதுக: ||

போக்ரான் பரிசோதனைகள் நடத்திய பின்பு இந்தியாவின் சக்தி என்ன என்பது உலக நாடுகளுக்கு தெரிந்தது. அதன் பின் அவை நம்மோடு நடந்து கொள்ளும் முறையே மாறிவிட்டது என்றார் டாக்டர் அப்துல்கலாம்.

உலகின் எந்த சக்தியும் கண்ணெடுத்துப் பார்க்க முடியாத அளவு பலசாலியாக இந்தியாவை உருவாக்கவேண்டும் என்றார் முன்னாள்   பிரதமர் வாஜ்பாயி. பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories