சுபாஷிதம்: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

subhashitam 1 3 - 2026

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

89. பலமே வாழ்வு!
பலவீனமே மரணம்!

ஸ்லோகம்:

வனானி தஹதோ வஹ்னே: சகா பவதி மாருத: |
ஸ ஏவ தீபநாசாய க்ருசே கஸ்யாஸ்தி சௌஹ்ருதம் ||
– சாணக்கிய நீதி 

பொருள்:

வனத்தில் தோன்றும் காட்டுத் தீக்கு காற்று நண்பனைப் போல் துணையாகிறது. அதே காற்று சிறிய தீபம் அணைவதற்கு காரணமாகிறது. பலவீனமானவர்களோடு யார் நட்பு கொள்வார்கள்?

விளக்கம்:

உடலால், மனதால், பொருளால் வலிமை பெற்றிருந்தால்தான் அனைவரும் நட்புக் கொள்ள விரும்புவார்கள் என்று எடுத்தியம்பும் ஸ்லோகம் இது.

சர்ஜிகல் ஆபரேஷன் மூலம் நம் நாட்டின் வலிமை வெளிப்பட்டது. அதன்பின் உலக நாடுகள் பல நமக்கு நட்புக் கரம் நீட்டின.

தனிமனிதன், சமுதாயம், நாடு எதுவானாலும் வலிமையோடு விளங்கினால்தான் கௌரவம். “பலவீனமானவர்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது” – “நா௨யமாத்மா பலஹீனேன லப்ய:” என்கிறது உபநிஷத்து. “பலவீனம் ஒரு பாவம்” என்பார் சுவாமி விவேகானந்தர்.

பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை அவமதிக்கத் தோன்றும். ஒரு பாவச் செயலைத் தூண்டுவது பலவீனம் என்கிறது சாஸ்திரம்.

பலவீனமான விலங்கு என்பதால்தான் ஆட்டினை பலி கொடுக்கிறார்கள். குதிரையையோ, யானையையோ, புலியையோ பலி கொடுக்க மாட்டார்கள் அல்லவா? என்று பலவீனம் குறித்து விவரிக்கும் ஸ்லோகம் ஒன்று பிரசித்தமாக உள்ளது.

அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச |
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பலகாதுக: ||

போக்ரான் பரிசோதனைகள் நடத்திய பின்பு இந்தியாவின் சக்தி என்ன என்பது உலக நாடுகளுக்கு தெரிந்தது. அதன் பின் அவை நம்மோடு நடந்து கொள்ளும் முறையே மாறிவிட்டது என்றார் டாக்டர் அப்துல்கலாம்.

உலகின் எந்த சக்தியும் கண்ணெடுத்துப் பார்க்க முடியாத அளவு பலசாலியாக இந்தியாவை உருவாக்கவேண்டும் என்றார் முன்னாள்   பிரதமர் வாஜ்பாயி. பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் இந்தியா வலிமை பெற்று மீண்டும் விஸ்வ குருவாக நிற்கும் நாள் நெருங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories