சென்னை: தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்றும் தன்னிடம் ஆவணங்கள் தொகுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும், தன் மீது வழக்கு போடுங்கள் என்றும் சொல்கிறார் கவிஞர் வைரமுத்து!
பாலியல் புகார் கூறுபவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. என் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு கூறப் படுகிறது என்று வைரமுத்து அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும், ஆவணங்களைத் தொகுத்து வைத்திருப்பதாகவும், தான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போதே யாரும் தீர்மானிக்க வேண்டாம் என்றும், அதை நீதிமன்றம் சொல்லட்டும் என்றும் கூறியுள்ளார் வைரமுத்து!

