December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

ஹூஸ்டனில் சீக்கிய போலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

sing thalival - 2025

ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தாலிவால் (42) சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்தவர் சந்தீப் சிங் தாலிவால்.

கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 2015ல் நாடு முழுவதும் பிரபலமானார். சீக்கியரான அவர் தனது பணியின் போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என போராடி அனுமதி பெற்றார். மேலும் 2017ல் ஹார்வே சூறாவளி தாக்கியபோது உடனடியாக நிவாரணப் பொருட்களை சேகரித்து மக்களின் பாராட்டை பெற்றார்.

ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்த அவர் நேற்று முன் தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார். அப்போது ஒரு காரை அவர் நிறுத்தியுள்ளார்.

அந்தக் காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.
இதில் பலத்த காயமடைந்த தாலிவால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

அவரை சுட்டுக் கொன்றதாக அந்த காரில் வந்த நபரும் அவருடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கொடூரமான சம்பவம். பட்டப் பகலில் நடந்துள்ள கொலை ” என ஹாரிஸ் கவுன்டியின் ஷெரீப்பான எட் கோன்சலஸ் கூறியுள்ளார். ‘அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில்தான் ஹூஸ்டன் நகருக்கு சென்றேன்.

அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என பா.ஜ. வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories