ஹூஸ்டனில் சீக்கிய போலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

sing thalival - 2026

ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தாலிவால் (42) சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்தவர் சந்தீப் சிங் தாலிவால்.

கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 2015ல் நாடு முழுவதும் பிரபலமானார். சீக்கியரான அவர் தனது பணியின் போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என போராடி அனுமதி பெற்றார். மேலும் 2017ல் ஹார்வே சூறாவளி தாக்கியபோது உடனடியாக நிவாரணப் பொருட்களை சேகரித்து மக்களின் பாராட்டை பெற்றார்.

ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்த அவர் நேற்று முன் தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார். அப்போது ஒரு காரை அவர் நிறுத்தியுள்ளார்.

அந்தக் காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.
இதில் பலத்த காயமடைந்த தாலிவால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

அவரை சுட்டுக் கொன்றதாக அந்த காரில் வந்த நபரும் அவருடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கொடூரமான சம்பவம். பட்டப் பகலில் நடந்துள்ள கொலை ” என ஹாரிஸ் கவுன்டியின் ஷெரீப்பான எட் கோன்சலஸ் கூறியுள்ளார். ‘அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில்தான் ஹூஸ்டன் நகருக்கு சென்றேன்.

அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என பா.ஜ. வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories