
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் வியாழக்கிழமை நிலநடுக்கம்ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது.
ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீபோல் பரவி வருகிறது.
அதில் அவர் ஆப்கானிஸ்தானில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பகுதியில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் தொடங்கி, பாகிஸ்தான் வழியாக பயணித்து இந்தியாவை அடையும் எனவும், இந்திய பெருங்கடலில் சென்று இது முடிவடையும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
வளிமண்டல ஏற்ற இறக்கங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த பகுதிகளில் பெரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் இதை துல்லியமான கணிப்பு இல்லை. வளிமண்டல சலனம் எல்லாமே நிலநடுக்கத்தில் முடியாது. இது ஒரு தோராயமான கணிப்பு மட்டுமே என்று கூறியுள்ளார்.




