December 11, 2025, 10:34 PM
25.5 C
Chennai

2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜோ பைடனுக்கு அழைப்பு!

new parliament buliding - 2025
#image_title

2024 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார்.

அதேபோல, இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல் சிசி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, வரும் 2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்தியாவில் 2024 ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாஷிங்டன் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றத்திற்கு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் 7ஆவது மற்றும் கடைசியாக நிலுவையில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் தகராறையும் தீர்த்துக் கொண்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின்போது 6 பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.

மேலும், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நமது பன்முக உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடர இரு தலைவர்களும் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories