2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜோ பைடனுக்கு அழைப்பு!

new parliament buliding - 2026
#image_title

2024 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார்.

அதேபோல, இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல் சிசி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, வரும் 2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்தியாவில் 2024 ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாஷிங்டன் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றத்திற்கு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் 7ஆவது மற்றும் கடைசியாக நிலுவையில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் தகராறையும் தீர்த்துக் கொண்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின்போது 6 பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.

மேலும், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நமது பன்முக உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடர இரு தலைவர்களும் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories