December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

corona - 2025

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளிடம் சுவாச நோய்களின் அதிகரிப்பு மற்றும் நிமோனியாவின் கொத்துகள் பற்றிய விரிவான தகவல்களை, உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் அதிகாரப்பூர்வ தகவல் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

13 நவம்பர் 2023 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தேசிய சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த சீன அதிகாரிகள், சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து செய்தி வெளியிட்டனர்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது, இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா (பொதுவாக இளம் குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சி காரணமாக இந்த சுவாச நோய்கள் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறினர். சுகாதார வசதிகள், சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு, நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியது இவற்றின் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

நவ.21 அன்று, வட சீனாவில் குழந்தைகளிடம், ‘இனம் கண்டறியப்படாத’ நிமோனியாவின் கொத்துகள் இருப்பதாக ஊடகங்களும் ProMED அறிக்கைகளும் தெரிவித்தன. சீன அதிகாரிகளால் முன்னர் அறிவிக்கப்பட்ட சுவாச நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு அல்லது தனி நிகழ்வுகளுடன் இவை தொடர்புடையதா என்பது குறித்த தெளிவாக தகவல்கள் இல்லை.

நவ.22 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தைகளிடம் காணப்பட்ட சுவாச நோய்கள் குறித்த கூடுதல் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவத் தகவல்களையும், ஆய்வக முடிவுகளையும், சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் மூலம் கோரியது.

இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட, கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சமீபத்திய பரவல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளின் தற்போதைய சுமை இவை குறித்த கூடுதல் தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

சீனாவில் தற்போதைய தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் மருத்துவ நெட்வொர்க்குகள் மூலம், சீனாவின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது.

அக்டோபர் மத்தியில் இருந்து, வடக்கு சீனாவில், முந்தைய மூன்று ஆண்டுகளின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அதிகரித்து வருவது பெரிதாகப் பதிவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, காய்ச்சல் போன்ற நோய்கள், RSV மற்றும் SARS-CoV-2 ஆகியவற்றின் போக்குகள் குறித்த தகவல்களைப் பதிவுசெய்யும் அமைப்புகளையும், உலகளவிலான இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு மற்றும் பதிலளிக்கும் தகவல் தளங்களையும் சீனா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, உலக சுகாதார அமைப்பு இந்தக் கூடுதல் தகவலைக் கேட்டுப் பெற்று, சீனாவில் சுவாச நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்குமென்று அது கூறுகிறது. இதில் WHO பரிந்துரைத்த தடுப்பூசியும் அடங்கும்; நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி, தொலைவில் வைத்திருத்தல்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டில் இருப்பது; பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு; பொருத்தமான முகக் கவசங்களை அணிவது; நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்தல்; மற்றும் வழக்கமான கை கழுவுதல் நடவடிக்கை இவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories