கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

corona - 2026

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளிடம் சுவாச நோய்களின் அதிகரிப்பு மற்றும் நிமோனியாவின் கொத்துகள் பற்றிய விரிவான தகவல்களை, உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் அதிகாரப்பூர்வ தகவல் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

13 நவம்பர் 2023 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தேசிய சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த சீன அதிகாரிகள், சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து செய்தி வெளியிட்டனர்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது, இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா (பொதுவாக இளம் குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சி காரணமாக இந்த சுவாச நோய்கள் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறினர். சுகாதார வசதிகள், சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு, நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியது இவற்றின் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

நவ.21 அன்று, வட சீனாவில் குழந்தைகளிடம், ‘இனம் கண்டறியப்படாத’ நிமோனியாவின் கொத்துகள் இருப்பதாக ஊடகங்களும் ProMED அறிக்கைகளும் தெரிவித்தன. சீன அதிகாரிகளால் முன்னர் அறிவிக்கப்பட்ட சுவாச நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு அல்லது தனி நிகழ்வுகளுடன் இவை தொடர்புடையதா என்பது குறித்த தெளிவாக தகவல்கள் இல்லை.

நவ.22 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தைகளிடம் காணப்பட்ட சுவாச நோய்கள் குறித்த கூடுதல் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவத் தகவல்களையும், ஆய்வக முடிவுகளையும், சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் மூலம் கோரியது.

இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட, கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சமீபத்திய பரவல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளின் தற்போதைய சுமை இவை குறித்த கூடுதல் தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

சீனாவில் தற்போதைய தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் மருத்துவ நெட்வொர்க்குகள் மூலம், சீனாவின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது.

அக்டோபர் மத்தியில் இருந்து, வடக்கு சீனாவில், முந்தைய மூன்று ஆண்டுகளின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அதிகரித்து வருவது பெரிதாகப் பதிவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, காய்ச்சல் போன்ற நோய்கள், RSV மற்றும் SARS-CoV-2 ஆகியவற்றின் போக்குகள் குறித்த தகவல்களைப் பதிவுசெய்யும் அமைப்புகளையும், உலகளவிலான இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு மற்றும் பதிலளிக்கும் தகவல் தளங்களையும் சீனா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, உலக சுகாதார அமைப்பு இந்தக் கூடுதல் தகவலைக் கேட்டுப் பெற்று, சீனாவில் சுவாச நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்குமென்று அது கூறுகிறது. இதில் WHO பரிந்துரைத்த தடுப்பூசியும் அடங்கும்; நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி, தொலைவில் வைத்திருத்தல்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டில் இருப்பது; பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு; பொருத்தமான முகக் கவசங்களை அணிவது; நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்தல்; மற்றும் வழக்கமான கை கழுவுதல் நடவடிக்கை இவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories