தெற்கு சூடானில் ரஷ்ய தயாரிப்பு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், அதில் இருந்த 41 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று 20 பணியாளர்களுடன் தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது. நைல் நதியின் மேல் பறந்து கொண்டு இருந்த போது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு விமானப் பணியாளர் உயிர் பிழைத்துள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அட்னி வீக் அட்னி கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் 23 நிமிடங்களில் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் நெகேல் என்னுமிடத்தில் நடுவானில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் பலியாயினர்.
Airplane just crashed near Juba Int’l Airport shortly after taking off. #EyeRadio’s D Santo: over 40 passengers died pic.twitter.com/SuFExWfX0Z
— Eye Radio Juba (@EyeRadioJuba) November 4, 2015
Initial images of the plane crash site in #Juba #SouthSudan #JubaAirCrash @unmissmedia @TalkofJuba pic.twitter.com/Q6Y7FhUp12
— Radio Miraya (@RadioMiraya) November 4, 2015