
நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர். எனவே, விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இதனால், விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என பரபரப்பு ஏற்பட்டது. அதில் பொதுச்செயாலளராக எஸ்.ஏ.சி பெயரும், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் பெயரும் இருந்தது.
ஆனால், இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எது என்னுடைய தனிப்பட்ட முடிவு. விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்படும் நிர்வாகிகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்தேன் என விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
அதன்பின், தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம். அதற்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையே, புகைப்படத்தையே பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் ‘ ஊடகங்களில் அரசியல் கட்சி தொடர்பாக எதுவும் பேசவேண்டாம் என விஜய் பல முறை கூறியும் என் கணவர் கேட்பதில்லை. எனவே, விஜய் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். என்னிடம் கட்சி துவங்குவது பற்றி எதுவும் கூறாமல் என் கணவர் கையெழுத்தை வாங்கிக்கொண்டார். எனவே, அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Source: Vellithirai News



