சென்னை 2 சிங்கப்பூர்- இயக்குநரின் கோரிக்கையை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் உள்ளிட்ட பைரேசி இணையதளங்களின் அட்மின்களிடம் சமீபத்தில் ரிலீசாகிய `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குநர் அப்பாஸ் அக்பர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் படம் ரிலீசான உடனே இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அந்த அளவிற்கு இணையதள பைரேசி சினிமாவிற்கு ஒரு தர்ம சங்கடமாகவே இருக்கிறது. இணையதள பைரேசியை தடுக்க தயாரிப்பாளர் சங்கமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகின. அதில் சென்னை 2 சிங்கப்பூர் படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீசான சில நாட்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட இணையதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பைரேசி இணையதளங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், சென்னை 2 சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு படம். 6 வருடமாக எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். மொத்தமாக இந்த படத்திற்காக ரூ.8 கோடியை செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை ஒரு வாரத்தில் எங்களால் எடுக்க முடியாது.

அதற்கு ஒரு 4 வாரங்களாவது வேண்டும். தற்போது தான் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. மக்களும் விரும்பி பார்க்க வருகின்றனர். அதேபோல் திரைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அப்படி இருக்கும் போது எங்களது வியர்வையும், வலியையும் உங்களது இணையதளத்தில் பார்க்கிறோம்.

இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை தங்களிடம் சொல்லி முடியாது. அதை சொல்லவும் கூடாது. எனவே எங்களுக்காக ஒரு 30 நாட்கள் படத்தை உங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். 31-வது நாளே மீண்டும் படத்தை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories