December 6, 2025, 3:55 AM
24.9 C
Chennai

சென்னை 2 சிங்கப்பூர்- இயக்குநரின் கோரிக்கையை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் உள்ளிட்ட பைரேசி இணையதளங்களின் அட்மின்களிடம் சமீபத்தில் ரிலீசாகிய `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குநர் அப்பாஸ் அக்பர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் படம் ரிலீசான உடனே இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அந்த அளவிற்கு இணையதள பைரேசி சினிமாவிற்கு ஒரு தர்ம சங்கடமாகவே இருக்கிறது. இணையதள பைரேசியை தடுக்க தயாரிப்பாளர் சங்கமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகின. அதில் சென்னை 2 சிங்கப்பூர் படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீசான சில நாட்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட இணையதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பைரேசி இணையதளங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், சென்னை 2 சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு படம். 6 வருடமாக எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். மொத்தமாக இந்த படத்திற்காக ரூ.8 கோடியை செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை ஒரு வாரத்தில் எங்களால் எடுக்க முடியாது.

அதற்கு ஒரு 4 வாரங்களாவது வேண்டும். தற்போது தான் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. மக்களும் விரும்பி பார்க்க வருகின்றனர். அதேபோல் திரைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அப்படி இருக்கும் போது எங்களது வியர்வையும், வலியையும் உங்களது இணையதளத்தில் பார்க்கிறோம்.

இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை தங்களிடம் சொல்லி முடியாது. அதை சொல்லவும் கூடாது. எனவே எங்களுக்காக ஒரு 30 நாட்கள் படத்தை உங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். 31-வது நாளே மீண்டும் படத்தை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories