பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை மூடி மறைக்காமல் தைரியமாக வெளியே கூறவேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலியல் குற்றங்கள், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து ஒருசில நடிகைகள் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் கயவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியபோது, ‘ம் சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பிரச்சனை உள்ளது. எனவே இந்த விஷயத்தில் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடூரங்களை மூடி மறைக்காமல் வெளியே தைரியமாக கூற வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்