பீப் பாடலை வெளியிட்டவர் சிவகார்த்திகேயன்?

Published:

பீப் பாடலை வெளியிட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று தகவல் பரவியுள்ளது. விளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு என்று பரவலாக பேசப்படுகிறது.

விளையாட்டாக நினைத்து பீப் பாடலை இணையதளத்தில் அவர் வெளியிட்டார். அதுவே தற்போது அவருக்கு வினையாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ‘பீப்’ பற்றிய புதிய சர்ச்சைப் பாடலை விளையாட்டாக நினைத்து அவர் தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார். அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்குதான் இந்தப் பாடலை முதலில் பகிர்ந்துள்ளார். அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் இணையதளத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்; அந்த நண்பர்களில் ஒருவர் இணையத்தில் பொதுவில் ஏற்றியுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது. நண்பர்களுக்குள் இவர்கள் பகிர்ந்து கொண்டது தற்போது வினையாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img