இரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும்.
விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள் இருக்கின்றனர். அதனால் இருவருக்கும் கண்டிப்பாக பஞ்சாயத்து நடக்கும் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வந்தனர். ஆனால் இருவரும் கோலிவுட் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகிறார்களாம்.
ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். அதோடு தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் கடலைபோடுகிறார்களாம்.
அதோடு ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவியின் ரசிகை என்பதால் அவர் நடிப்பதை பார்ப்பதற்காக தனக்கு காட்சிகள் இல்லாத நாட்களிலும் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அப்படி வரும் போதெல்லாம் ஹன்சிகாவுடன் ஜாலியாக ரகளையில் ஈடுபட்டுள்ளாராம் ஸ்ருதி.


