பட்டையை கிளப்ப தயாராகிவிட்டது- ஐஸ்வர்யா தனுஷின் “வை ராஜா வை”

aishwarya-dhanushதரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில்மக்களை சென்றடைவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம்அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். தற்போது இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா ஆர் தனுஷ் அவர்களின் நுட்பமான இயக்கத்தில் உருவான“வை ராஜா வை” விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இப்படத்தில் நவரசத்துடனும் இளமை துள்ளளுடனும் “இளமை நாயகன்” கவுதம் கார்த்திக்கதாநாயகனாகவும், “அழகிய தமிழ் மகள்” பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்,டானியல் பாலாஜி வில்லன் கதாபத்திரத்திலும், விவேக் மாறுபட்ட கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுருடன் சேர்ந்து சதீஷ், மனோ பாலா, M.S.பாஸ்கர், மயில் சாமி காமடியில் கலக்க்கியிருக்கிறார்கள். முதல் முறையாக இயக்குனர் வசந்த் சாய் கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நடித்துஇருக்கிறார், டாப்சி மிக சிறப்பான கதாபத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார், மேலும் சண்டை கட்சியில் தூள் கிளப்பி இருக்கிறார். இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கிய முதல் படம் “3”. தனுஷ்’ஐ வைத்து அழுத்தமான காதல் கதையில் bipolar disorder என்ற மன நோயையின் தாக்கத்தையும் அதன்பாதிப்பையும் உணர்த்தும் வகையில் இயக்கியிருந்தார். அதில் வரும் “why this kolaveri di”  பாடல் உலகம் முழுவதும் அனைவரையும் வசிகரித்து இன்று வரை அசைபோட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த எதிப்பார்பிக்கிற்கு இடையே அவரின் தனது இரண்டாவது படைப்பான “வை ராஜா வை” படத்தை இயக்குகிறார். முதல் படத்தில் அனிருத்துடன் பணியாற்றிய ஐஸ்வர்யா இப்படத்தில் யுவன் சங்கர்ராஜாவுடன் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் அனைவராலும் வரவேற்க்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில்  intuition எனற special power’ஐ மய்யமாக வைத்து காதல், காமெடி, திரில்லர் என கதையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் ஒரு கமர்சியல்எண்டர்டெயினராக திரைக்கதை அமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ். சமிபத்தில் வெளியான  இப்படத்தின் முன்னோட்டம் (முதல் டிரைலர் 7.7 லட்சங்கள் மற்றும் இரண்டாவது டிரைலர் 2 லட்சங்கள்) அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதில் கொக்கி குமாராக வரும் தனுஷின் சிறப்பு தோற்றம் அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் அமைக்கபட்டிருக்கிறது. அதனால்  படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இப்படத்தை பார்த்த தணிக்கைகுழுவினர் ‘U’ சான்றிதழ் வழங்கி படக்குழுவனரையும்இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷையும் பாராட்டினர். தணிக்கை குழுவினரின் பாராட்டு தனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதினார் இயக்குனர். ருலேட் என்ற கேம் தமிழ் சினிமாவிற்கு புதுசு, அது அனைத்து மக்களுக்கும் புரியும் படி கதை சொல்லும் விதத்திலும் காட்சி படுத்தும் விதத்திலும் திறம்பட செயல் பட்டுள்ளனர் படக்குழு. சிங்கப்பூரில் உள்ள பிரமாண்டமான  ராயல் கரோபியன் கப்பலில் படபிடிப்பை நடத்த திட்டமிட்டு, படக்குழு அனைவரும் சிங்கப்பூருக்கு சென்று ராயல் கரோபியன் கப்பலில் பயணித்தபடியே பாங்காக் மற்றும் வியட்நாம் வழியாக படபிடிப்பை நடத்தினார்கள்.அந்த பிரமாண்ட கப்பலின் காட்சி அமைப்பு படம் பார்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் திறம்பட பணியாற்றியுள்ளார். “பச்சை வண்ண பூவே”   பாடல் காட்சிக்காக ஜப்பான் சென்று அந்த ரம்மியமான சுழலைபாடலுக்கு தகுந்தார் போல் காட்சி பிடித்துள்ளனர். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்தின் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இளமை துள்ளலுடன் படமாக்க பட்டிருக்கிறது!!! பொதுவாக ஒரு படத்தின் எதிர்பார்ப்பு, ரசிகர்கள் படம்பார்க்க டிக்கேட்களை முன்பதிவுசெய்யும் எண்ணிக்கை வைத்து கணிப்பார்கள். ஆனால் வை ராஜா வை படத்திற்குதிரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிட முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டிய விதம் படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது. மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றிபெற்றபடங்களையும் உருவாக்குவதிலும் வெளியீடுவதிலும் கைதேர்ந்த தயாரிப்புநிறுவனமான கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” நிறுவனம், “வை ராஜா வை”படத்தை தமிழக்மெங்கும் வெளியிடுகிறது. இவர்கள் சமீபத்தில் வெளியீட்ட மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “ஒ காதல் கண்மனி” பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது. உலகமெங்கும் வா ராஜா வா என்று ரசிகர்களை அழைக்க, வரும் மே 1ல் வெளியாகிறது வை ராஜா வை.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories