பட்டாசு தடைக்கு யார் காரணம்? பரபரப்பை ஏற்படுத்திய நோட்டீஸ்!

crackers - 2026

பட்டாசு தடைக்கு யார் காரணம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் வெளியிட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தங்களைத் தாங்களே குற்றம் சுமத்திக் கொள்வது போல் உள்ளது.

கிறிஸ்தவ பள்ளிகளில் நமது குழந்தைகளிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ பள்ளிகள் சத்தியம் வாங்கிய போது அமைதியாக இருந்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

மேலும் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்… கிறிஸ்தவர்களும் கம்யூனிஸ்டுகளும் பட்டாசு தயாரிக்க குழந்தைகளை எல்லாம் பயன்படுத்துகின்றனர் ஆதலால் நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என ஊர் ஊராக பிரச்சாரம் செய்தனர் அப்போது அமைதியாக இருந்தது யார்?

பட்டாசு வெடிப்பது நமது மதத்திற்கு எதிரானது எனவே நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வேற்று மத வழிபாட்டுத் தலங்களில் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட போது அமைதியாக இருந்தது யார்?

டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்த நம் தொழிலை நோக்கி நம் வருமானத்தை சீரழித்து நாசம் செய்தது யார்?

பட்டாசு தொழிலை நோக்கி நம் பாரம்பரியத்தை நாசமாக்க உயர் உச்ச நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனம் என்றும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்த போது அதை கண்டிக்காமல் அமைதியாக இருந்தது யார்?

பட்டாசு தொழிலில் மட்டுமல்ல சபரிமலை கள்ளக்காதல் தீர்ப்பு ஓரினச்சேர்க்கை தீர்ப்பு என நமது பண்பாடு பாரம்பரியம் கலாசாரத்தை மிகப் பெரிய சதி நடக்கிறது அந்த சக்திகள் யார் என அடையாளம் கண்டு கொள்ளாத நாமே காரணம்… – என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது!

அண்மைக்காலமாக பட்டாசு தடை அறிவிப்பு வெளி வந்த பின்னர் சிவகாசி விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் மதமாற்றங்கள் நடைபெறுவதாகவும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் மக்களிடம் அவர்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்பதாகக் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன! இவை சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு நோட்டீசை ஹிந்து பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ளது!

crackers ban who is responsible - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories