அப்ரூவ்ட் ஸ்தபதிகள் எனும் பெயரில் கொத்தனார்களின் பட்டியலை வைத்துக் கொண்டு, கமிஷன் பேசி, கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள் திமுக.,வினர் என்று புகார்களைக் கூறி வருகின்றனர் சமூகத் தளங்களில்!
கோயில்கள் கொள்ளையரின் கூடாரம் என்று கதை வசனம் பேசி கைத்தட்டல் வாங்கிய கையோடு, கோயில்களுக்குள் புகுந்து கபளீகரம் செய்துவிட்டது கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்! அதோ திருடன் அதோ திருடன் என்று திசை திருப்பிவிட்டு, ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்துக் கொண்டு செல்லும் கொள்ளைக்காரக் கூட்டமாக, திமுக.,வினர் இருப்பது அண்மைக்கால சிலைத்திருட்டு வழக்குகளும் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன என்கிறார்கள்! இதனை நீதிமன்றமே பகிரங்கமாகக் கூறி, நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னுமோர் அதிர்ச்சி தரும் தகவலையும் வெளியிட்டு, இதில் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்!
அதில், அப்ரூவ்ட் ஸ்தபதிகள் என்ற பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு, ஆகம விதிகள் எதுவும் தெரியாத வெறும் கொத்தனார்களை ஈடுபடுத்துகிறார்கள். இதில் கமிஷன்கள் மூலம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பெருமளவில் கூட்டு சேர்ந்து ஈடுபடுகிறார்கள். இந்த விவரம் தெரியவருவதால், கோயில்களுக்கு கட்டுமானத்தில் ஸ்பான்ஸர்கள் வரவே தயங்குகிறார்கள் என்று புகார் கூறுகின்றனர். இது குறித்து உண்மையான விசாரணை மேற்கொள்ளப் பட்டால் பல பகீர் தகவல்கள் தெரியவரும் என்கின்றனர்.
இந்த திமுக கிராதகன்கள் HR&CE அதிகரிகளுடன் சேர்ந்து கூட்டு கொள்ளையடிக்க அப்ரூவ்டு ஸ்தபதிகள் என்ற லஞ்சம் குடுக்கிகள் பட்டியல் வைத்துள்ளனர்.இதில் பல பேர் ஆகம விதிகள் தெரியாத கொத்தனார்கள்.
— சகடை ???? (@srjk22) January 17, 2019
இதனால் பல கோயில்களுக்கு ஆர்வமாக கட்டுமானங்கள் செய்ய ஸ்பான்சர்கள் தயங்குகிறார்கள்.
விசாரணை தேவை.