December 6, 2025, 4:53 AM
24.9 C
Chennai

காங்கிரஸ் செய்த மாபெரும் துரோகத்துக்கு கணக்கு தீர்க்கும் நாள்!

IMG 20190419 WA0027 - 2025

கேள்வி: சாத்வி பிரக்யா காவி தீவிரவாதி, அவருக்கு பா.ஜ.க எம்.பி சீட் வழங்கியுள்ளது – தி.க, கம்யூனிஸ்ட் தி.மு.க-வினர் புலம்பல்! இது குறித்து தங்களுடைய கருத்து? (ட்விட்டரில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி)

உண்மை என்ன? இவ்விடயத்தில்(வழக்கில்) மற்றவர்களை காட்டிலும் எனக்கு பேச நிறையவே அனுபவம் இருக்கிறது. 2011 – 2014-ல் நான் பூனாவில் சட்டம் பயின்ற காலத்தில் எனது கல்லூரியின் மூத்த பேராசிரியர் மற்றும் வழக்கறிஞராக இருந்த ஒரு ஸ்வயம்சேவகர் தான் சாத்வி ப்ரக்யா மற்றும் புரோகித் வழக்குகளில் அவர்களுக்கு ஆதரவாக வாதாடி வந்தார். 20 வயது முதலே மாணவப் பருவத்தில் இந்த வழக்கு தொடர்பாக வெளியில் வராத பல ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் படித்துள்ளேன். சோனியா காந்தி ஹிந்து மதத்தை பழி தீர்க்க செய்த இந்த மாபெரும் அக்கிரமத்தை அப்போதே பார்த்து நொந்து போனவன் என்கின்ற வகையில் சொல்கிறேன், சாத்வி ப்ராக்யா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானது! இதில் மாற்றுக் கருத்து துளியும் இல்லை.

இது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி தற்போது பொதுவெளியில் உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான சிமி இயக்கத்தின் தலைவர்கள் நார்கோ சோதனை செய்ப்பட்ட போது தாங்கள் தான் சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக்கொண்டது மட்டுமின்றி ஆதாரங்களுடன் பிடிப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்க தீவிரவாதிகள் ஒப்புக்கொண்ட ஒரு பழியை ஹிந்து தலைவர்கள் மீது புகுத்தி ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி, ப.சிதம்பரம் “காவி தீவிரவாதம்” என்ற சொல்லாடலை உருவாக்கி, ராகுல் காந்தி அமெரிக்க தூதரிடம் “ஹிந்து தீவிரவாதம் தான் இந்தியாவின் மிகப்பெரிய சவால்” என்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களை discredit செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தால் மொத்த ஹிந்து மதத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காக அடகு வைத்த அரக்கர்கள்.

சாத்வி ப்ரக்யாவிற்கு சிறையில் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் கேன்சரால் அவதிப்பட்ட போது கூட மருத்துவ சிகிச்சைக்காக பெயில் கொடுக்க விடாமல் பார்த்துக் கொண்டது சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம். அஜ்மல் கசாப்பிற்கும், யாக்கூப்பிற்கும் வளையல்களை உடைத்து கண்ணீர் வடித்த சமூக போராளிகளும், மனித உரிமை இயக்கங்களும், பெண்கள் இயக்கங்களும் சாத்வி ப்ரக்யாவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் சிறையில் நடந்தது கண்கூடாக தெரிந்தும் மூச்சைக் கூட விடவில்லை என்பது உச்சபட்ச கேவலம். சாத்விக்காக பெயில் கிடைத்து வெளியில் வந்தவுடன் ஹிந்துத்வா ஆதரவாளர்கள் crowdfunding செய்து சில லட்சங்களை அவரிடம் அப்படியே மருத்துவ சிகிச்சைக்காக ஒப்படைத்தோம், அவரது சகோதரி தான் அவரை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

இன்று சாத்வி ப்ராக்யா நெடுநாள் நீதிமன்ற கொடுமை மற்றும் யுத்தத்திற்கு பிறகு நிரபராதி என்று 100% நிரூபணமாகி மேடைக்கு மேடை தன்னை காவி தீவிரவாதி என்று முழங்கி character assasinate செய்த காங்கிரஸின் திக் விஜய் சிங்கை எதிர்த்து அதிகாரப்பூர்வ பா.ஜ.க வேட்பாளராக மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.

அதேவேளையில் ஹிந்து மதத்தை கொச்சைப்படித்தி வந்த ராகுல் காந்தி கோவில் கோவிலாக ஏறி, பூஜை பூஜையாக செய்து ஹிந்துக்கள் வாக்குகளை பிச்சை கேட்டு வருகிறார். இவையனைத்தும் “மோடி” என்ற ஒரு மாமனிதரால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்பது 100% உண்மை.

இறைவா, என்ன உன் மகிமை! சாத்வி ப்ராக்யாவிற்கு இந்த வாய்ப்பை அளித்த பா.ஜ.க தலைமைக்கு தலை வணங்குகிறேன்.

தி.மு.க கொத்தடிமைகள் காங்கிரஸுக்கு மொத்தமாக அடகு வைக்கப்பட்டு விட்டதால் மனசாட்சியே இல்லாமல் வக்காலத்து வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. இவ்விடயத்தில் காங்கிரஸ் கட்சியே அதிகாரப்பூர்வ எதிர்ப்பு ஒன்றையும் தெரிவிக்கவில்லை, ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அவர்கள் செய்தது மாபெரும் துரோகம் என்பது. ₹200 கூலிக்காக ஒரு அப்பட்டமான ஜோடிக்கப்பட்ட வழக்கை நியாயப்படுத்தாதீர்கள்!

ஹிந்து விரோத கம்யூனிஸ்ட் ஆதரவு செய்தி நிறுவனங்கள், இணையதளங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இவ்விடயத்தில் கூறும் கட்டுக்கதைகளை தயவு செய்து நம்பாதீர்கள்.

2011 முதல் இவருக்காக குரல் கொடுத்து வருகிறேன், எனது ட்விட்டர் கணக்கை தற்போது பார்த்த பின்பு தான் தெரிகிறது. மிகவும் மன நிறைவான நாள் இன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories