பூசணிக்காய் இட்லி :
தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி -200 கிராம், உளுத்தம் பருப்பு- 150 கிராம், பச்சைஅரிசி -150 கிராம், பூசணி -ஒன்றரைப் பத்தை , வெந்தயம் -2 ஸ்பூன் , தயிர்- அரைக்கப், உப்பு-தேவைக்கேற்ப .செய்முறை:
அரிசிகளைத் தனியாகவும், உளுந்து,வெந்தயம் தனியாகவும் களைந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அரைத்து, பூசணிக்காயை தோல்,விதை நீக்கி , கரகரப்பாக அரைத்து இரண்டையும் கலந்து, உப்பு தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து இட்லி செய்யவும்.