முன்விரோதம்,இரு இளைஞர்கள் படுகொலை, 5 பேர் மீது வழக்கு பதிவு, 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்..

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக,இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதில் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

IMG 20221125 WA0119 1 - 2026
கொலையான ரத்தினவேல் பாண்டியன்.
IMG 20221125 WA0118 - 2026
கொலையான சபரிமலை.

.

IMG 20221125 WA0121 - 2026
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் காந்திநகர் அருகே இரட்டைக்கொலை நடந்த இடத்தில் நேரில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டார் மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி
                     விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.டி.ஐ.ஜி பொன்னி நேரில் விசாரணை.

                 திருச்சுழி வட்டம் உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கம்மாள்(52).இவர் கடந்த மார்ச் மாதம் 12 ம் தேத் குடும்பப்பிரச்சினை காரணமாக உறவினர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக திருச்சுழி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது.இக்கொலைவழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியைச் சேர்ந்த சபரிமலை(36) என்பவர் பிணையில் வெளிவந்து தனது உறவினரான திருச்சுழி வட்டம் குலசேகர நல்லூரைச்சேர்ந்த  ரத்தினவேல் பாண்டியன் (32)  என்பவரது வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் காந்தி நகர் அருகே உள்ள புதர்க்காட்டில் சபரி மலை மற்றும் ரத்தினவேல் பாண்டியன் ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்டும், ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்று நள்ளிரவில் இருவரது சடலங்களையும்  அருப்புக்கோட்டை போலீசார் கைப்பற்றினர்.மேலும் கொலை நடந்த இடத்தில்,  மாவட்ட எஸ்.பி. மனோகர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.மேலும்,மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு,விசாரணையை முடுக்கிவிட்டார்.இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீசார், உடையனாம்பட்டியைச்சேர்ந்த கருப்பையா மகன் சந்தன மகாலிங்கம், சுந்தர்ராஜ் மகன் கருப்பையா, மற்றும் சிவகாசியைச்சேர்ந்த குருசாமி மகன் கருப்பையா, சுந்தர்ராஜ் மகன் பெரியசாமி, சுந்தர்ராஜ் மகன் குருசாமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் உடையனாம்பட்டி ராக்கம்மாளின் ( மார்ச் 12ல் கொலையானவர் ) மகன்களான சூரிய பிரகாஷ்(21), ஜெயப்பிரகாஷ்( 23) மேலும், மற்றொருவரான  முகேஷ் குமார்(37) ஆகிய  3 பேர் மதுரை 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நண்பகலில் ஆஜராகினர்.அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீசார் இக்கொலைக்குற்றத்தில் தொடர்புடையவர்களாகக் கருதி வழக்கு பதிந்து 5 பேரைத் தேடிவரும்  நிலையில் , மதுரை கோர்ட்டில் சரணடைந்தவர்கள்  3 பேர் குறித்தும் விசாரணை வளையத்தில் சேர்த்து,தீவிர  விசாரணை மேற்கொண்டனர்.
ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories